Papaya Leaf Benefits: நாடு முழுவதும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மழைக்காலத்தில் ஒவ்வொரு அண்டும் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்படுவதை நாம் காண்கிறோம். டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லெட்டுகள் பற்றாக்குறை ஒரு தீவிர பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த நோய் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை விரைவாக குறைக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெங்குவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது மிக அவசியம். இதனுடன் இதற்கு சிகிச்சையளிப்பதில் பல வீட்டு வைத்தியங்களும் உதவியாக இருக்கும். அவற்றில் ஒரு முக்கியமான வீட்டு வைத்தியம் பப்பாளி இலைகளைப் பயன்படுத்துவது. பப்பாளி இலைகளை உட்கொள்வதன் மூலம், பிளேட்லெட்டுகளின் குறைபாட்டை விரைவாக ஈடுசெய்ய முடியும். ஆகையால் டெங்கு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


பப்பாளி இலைகளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவற்றில் காணப்படும் தனிமங்கள் பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. பிளேட்லெட்டுகளின் உற்பத்தியைத் தூண்டும் பாப்பைன் மற்றும் சைமோ-பாபைன் போன்ற நொதிகள் இந்த தனிமங்களில் அடங்கும். 


இரத்த பிளேட்லெட்களை அதிகரிப்பது மட்டுமின்றிம், பப்பாளி இலைகளின் மூலம் உடலுக்கு இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன. இதில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதன் மூலம் டெங்கு வைரஸை எதிர்த்துப் போராட உதவி கிடைக்கிறது. மேலும் இது பிளேட்லெட்டுகளின் அளவை சீராக வைக்கிறது.


மேலும் படிக்க | கிராம்பு நீரை குடிப்பதால்... உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் - இதயம் முதல் கல்லீரல் வரை!


Papaya Leaves: பப்பாளி இலைகளை எப்படி சாப்பிடுவது?


- டெங்கு நோயாளிகள் பப்பாளி இலைகளை பல வழிகளில் உட்கொள்ளலாம். 
- பப்பாளி இலைகளில் இருந்து சாறு எடுத்து அதை உட்கொள்வதே எளிய வழி. 
- இதற்கு, பப்பாளி இலைகளை கழுவி சுத்தம் செய்து, அவற்றை அரைத்து சாறு எடுக்க வேண்டும். 
- இந்த சாறை (Papaya Juice) காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்து வந்தால், இரத்த ப்ளேட்லெட்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். 
- பப்பாளி இலைகளின் சாறு கசப்பாக இருக்கும்.
- ஆகையால், அதை தேன் அல்லது எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம்.


Papaya Leaf Juice: தற்காப்பு நடவடிக்கைகள்


பப்பாளி இலைகளின் சாறு இரத்த பிளேட்லெட்டுகளை (Blood Platelets) அதிகரிப்பதில் நன்மை பயக்கும் என்றாலும், அதை உட்கொள்ளும் முன்னர் மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு மருத்துவரிடம் கேட்காமல், ஆலோசனை பெறாமல் பப்பாளி இலை சாறு மட்டுமல்லாமல் எந்த வித வீட்டு வைத்தியங்களையும் செய்து பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இது தவிர, பப்பாளி இலைகளை அதிகமாக உட்கொள்வது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆகையால் அதை குறைந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்வது நல்லது.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இதயத்தை பாதுகாப்பாக காக்க உதவும் பழங்கள் : தினமும் சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ