பச்சை வெங்காயத்தின் நன்மைகள்: வெங்காயம் அனைத்து வீடுகளிலும் எப்போதும் காணப்படும் ஒரு காய்கறியாகும். இந்தியா மட்டுமின்றி பல நாடுகளின் சமையலறைகளில் இந்த வெங்காயம் இல்லாமல் சமையல் முழுமையடையாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. கோடையில் வெங்காயம் சாப்பிடுவதன் முக்கியத்துவம் இன்னும் அதிகரிக்கிறது. குறிப்பாக வெப்ப அலை உங்களைத் தொந்தரவு செய்யும் போது வெங்காயம் பெரிய நிவாரணமாக அமைகிறது. வெங்காயத்தின் நன்மைகளை பற்றி பார்க்கலாம.


1. உடல் வெப்பநிலையை சீராக்கவும்


கோடை காலத்தில் பச்சை வெங்காயத்தை சாப்பிட்டால், அது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. இதன் காரணமாக, அதிக வெப்பம் மற்றும் வெப்பத்தின் மோசமான விளைவு உடலில் ஏற்படாமல் இருக்கிறது. மதிய உணவுடன், பச்சை வெங்காயத்தை சாலட் வடிவில் சாப்பிடலாம் அல்லது பச்சை கொத்தமல்லியுடன் தயாரிக்கப்பட்ட அதன் சட்னியையும் உட்கொள்ளலாம். 


2. குடல்களை வலுவாக்கும்


வெளியிடங்களில் சாப்பிடாமல் இருக்க முயற்சிக்கலாம் என்றாலும், அதை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லை. மேலும் கோடைக்காலத்தில் உணவுப் பொருட்கள் மிக விரைவாக கெட்டுவிடும். பல சமயங்களில் உணவு கெட்டுப் போனாலும் அதில் வாசனை வரத் தொடங்காததால் அதைச் சரியாக இருப்பதாக எண்ணி சாப்பிடுகிறோம். இது நமது குடல் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. 


பச்சை வெங்காயத்தை உட்கொள்வதால், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறது. இது வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாக்கள் வளர அனுமதிக்காது. அதாவது கோடையில் வயிறு ஆரோக்கியமாக இருக்க வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | High Cholesterol Foods: இந்த 5 பொருட்களில் அதிகளவு கொலஸ்ட்ரால் உள்ளது


3. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்


வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலும், அல்லது காய்கறியில் சேர்த்து சமைத்து சாப்பிட்டாலும், அது உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. ஏனெனில் வெங்காயத்தை உட்கொள்வதால், உடலில் உள்ள உறைதல் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும்.


4. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்


உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த வெங்காயம் உதவுகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இதற்கான காரணம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வெங்காயத்தில் உள்ள கந்தகம், உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.


5. புற்றுநோய் செல்கள் வளர்வதை நிறுத்த உதவும்


உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், உடலில் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்க சிவப்பு வெங்காயம் உதவியாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் நம் அனைவரின் உடலிலும் பிரச்சனைக்கு உரிய சில செல்கள் உருவாகின்றன. அவை சரியான நேரத்தில் அகற்றப்படாவிட்டால், பின்னர் அவை புற்றுநோயாக மாறும். அதனால்தான் ஆரோக்கியமான உணவுமுறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில் ஆரோக்கியமான உணவில் உள்ள ஊட்டச்சத்து இந்த செல்கள் வளரவிடாமல் தடுக்கிறது. வெங்காய நுகர்வும் அவற்றில் ஒன்று.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | இஞ்சியை தோல் நீக்கி பயன்படுத்தும் பழக்கம் உள்ளதா; இந்த செய்தி உங்களுக்குத் தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR