தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயிலிருந்து விடுபட, சில மருந்துகளுடன், வீட்டு வைத்தியத்தை பின்பற்றுவதன் மூலம் இரத்தில் உள்ள சர்க்கரையை சிறந்த வகையில் கட்டுப்படுத்தலாம். அந்த வகையில் சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் (Gymnema sylvestre) என்ற மூலிகை ஒரு வரப்பிரசாதம் எனலாம். இது தென், மத்திய இந்தியா மற்றும் இலங்கையின் வெப்பமண்டலக் காடுகளில் அதிகம் காணப்படும் மூலிகைச் செடி. சிறுகுறிஞ்சான் என்ற மூலிகை, சர்க்கரை கொல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் இலைகளைச் சிறிதளவு மென்று பிறகு, இனிப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால், இனிப்புச்சுவையே நாவிற்குத் தெரியாது. இதன் காரணமாக இவை, ‘சர்க்கரை கொல்லி’ எனப்படுகிறது.அதிலுள்ள ஜிம்னேமிக் அமிலம் காரணமாக கசப்புச் சுவை கொண்டதாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுகுறிஞ்சான் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாய் இலை போன்று காணப்படும். இது கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களாக நீரிழிவு நோய்க்கு அருமருந்தாக இந்த மூலிகை உள்ளது. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், தினமும் வெறும் வயிற்றில் சிறுகுறிஞ்சான் இலைகளை சாப்பிட வேண்டும். 


சிறு குறிஞ்சான் என்னும் சர்க்கரை கொல்லி இலைகள் டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய இரு வகை நீரிழிவு நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர் பெறச் செய்து இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமாகும்.


நீரிழிவு நோயை குணப்படுத்துவதை தவிர, கெட்ட கொழுப்பின் (எல்.டி.எல்) அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிப்பதன் மூலமும் கொழுப்பைச் சமநிலைப்படுத்துவதற்கும் மிகவும் உதவுகிறது.


மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!


சர்க்கரை நோய்க்கு சிறு குறிஞ்சான் அருமருந்து என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த இலைகளில் பிசின்கள், அல்புமின், குளோரோபில், கார்போஹைட்ரேட், டார்டாரிக் அமிலம், ஃபார்மிக் அமிலம் மற்றும் பியூட்ரிக் அமிலம் உள்ளன. இதன் காரணமாகவே இதன் இலைகளை மென்று சாப்பிடுவதால் நாள் முழுவதும் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ