Antibody To Coronaviruses: கொரோனா மீண்டும் மற்றொரு அலையை ஏற்படுத்துமா என்ற அச்சங்களுக்கு மத்தியில், அறிவியல் ஆராய்ச்சிகளின் உதவியுடன் இந்த ராட்சத வைரஸை சமாளித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் ஆறுதல் சொல்கின்றனர். இவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளையும் நடுநிலையாக்கக்கூடிய ஆன்டிபாடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் உலகிற்கு பெரிதும் உதவியுள்ளன.ஆனால், அவ்வப்போது தனது மரபணுவை மாற்றிக் கொண்டு புதிய அவதாரத்தை எடுத்து வருகிறது கொரோனா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவின் புதிய பிறழ்வுகளை எதிர்த்துப் போராட பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது அவசியம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது ஒரு புறம் என்றால், SP1-77 எனப்படும் ஆன்டிபாடி கண்டுபிடிக்கப்பட்டது, அனைத்து கொரோனா வைரஸின் பிறழ்வுகளையும் நடுநிலையாக்குகிறது என்ற தகவல்கள் அனைவரையும் சற்று ஆசுவாசம் கொள்ள வைக்கிறது.


மேலும் படிக்க | COVID Horror: விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா அலை! புத்தாண்டை பதம் பார்க்கும் கோவிட்


SARS-CoV-2 Omicron துணை வகைகள், மிகவும் அங்கீகரிக்கப்பட்ட SARS-CoV-2 நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளுக்கு எதிர்ப்பு மற்றும் தடுப்பூசியால் தூண்டப்பட்ட ஆன்டிபாடிகளைத் தவிர்ப்பதன் காரணமாக உலகளாவிய சுகாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளன. ஓமிக்ரான் துணை வகைகளை நிர்வகிப்பதற்கும், புதியவற்றைத் தயாரிப்பதற்கும், பரந்த மற்றும் சக்திவாய்ந்த மனிதமயமாக்கப்பட்ட SARS-CoV-2 நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை தனிமைப்படுத்துவதற்கான கூடுதல் வழிமுறைகள் தேவைப்படுகிறது.


VH1-2 ஹெவி செயின் (HC) மற்றும் மனித Vκ1-33 ஒளிச் சங்கிலியின் V(D)J மறுசீரமைப்பு மூலம் மட்டுமே முதன்மை B செல் ஏற்பி (BCR) திறமை உருவாக்கப்படுகிறது. இந்த ஆய்வில், பரந்த மற்றும் வலிமையான SP1-77 நடுநிலைப்படுத்தல் செயல்பாடு மற்றும் வழக்கத்திற்கு மாறான செயல் முறை ஆகியவை இது சிகிச்சை திறனைக் கொண்டிருக்கலாம் என்று தெரியாந்துள்ளது.


அதேபோல், SP1-77 பிணைப்பு, எதிர்கால SARS-CoV-2 வகைகள் மற்றும் பிற நோய்க்கிருமிகளுக்கு எதிரான சிகிச்சை ஆன்டிபாடிகளை அடையாளம் காண பங்களிக்கக்கூடும். என்று பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஒரு ஆய்வின் போது அதை கண்டுபிடித்தனர். இந்த கண்டுபிடிப்புகள், சயின்ஸ் இம்யூனாலஜி என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


SP1-77 ஒரு தளத்தில் ஸ்பைக் புரதத்தை பிணைக்கிறது, இது இதுவரை எந்த மாறுபாட்டிலும் மாற்றப்படவில்லை, மேலும் இது ஒரு புதிய பொறிமுறையால் இந்த மாறுபாடுகளை நடுநிலையாக்குகிறது" என்று ஆய்வு இணை ஆசிரியர் டோமாஸ் கிர்ச்சவுசென், தெரிவித்திருந்தார். 


 


எச்.ஐ.விக்கு பரந்த நடுநிலையான ஆன்டிபாடிகளைத் தேடுவதற்காக உருவாக்கப்பட்ட பரிசோதனையை மாற்றியமைத்து, இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மனிதனைப் போன்ற நோயெதிர்ப்பு அமைப்புக் கொண்ட எலிகளுக்கு நடத்திய இந்த பரிசோதனைகள், கொரோனாவுக்கு எதிரான மனிதர்களின் அச்சங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கலாம். இருந்தாலும், மேலதிக ஆய்வுகள், ஆராய்ச்சிகள் கொரோனாவை விரைவில் காணாமல் ஆக்கிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஆனால், இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருந்தாலும், ஆறுதல் தரும் விஷயங்களும் இதில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்,  


மேலும் படிக்க | Nasal-vaccine: கொரோனா பூஸ்டர் தடுப்பு மருந்தை மூக்கில் போட்டுக் கொள்ளவது சுலபம்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ