பலருக்கு சரும பிரச்னை இருக்கிறது. குறிப்பாக தங்களது முகம் பொலிவாக மாற வேண்டுமென்று ஏகப்பட்ட செயல்களில் ஈடுபடுவர். அதில் அனைவருக்கும் பெரும்பாலும் முழு பலனும் கிடைப்பதில்லை. அதேசமயம் முகம் பொலிவாக மாற எளிதான வழி ஒன்று இருக்கிறது. அது கஸ்தூரி மஞ்சள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெறும் மஞ்சளை பூசாமல், அதனுடன் பால், தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீர் கலந்து உபயோகிப்பது சிறந்தது.


கஸ்தூரி மஞ்சளை எலுமிச்சை சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பைத்த மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம்.



கஸ்தூரி மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறைந்து பருக்கள் தோன்றுவது தடைபடும். தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கமும் நீங்கும்.


மேலும் படிக்க | Heart Attack: மாரடைப்பின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்


கஸ்தூரி மஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர வேண்டும்.


கஸ்தூரி மஞ்சள், பைத்த மாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். அப்படி கழுவினால் முகம் பொலிவாகும்.முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ்பேக் ஆகும்.


மேலும் படிக்க | Health vs Kale: நீரிழிவையும், ரத்த அழுத்தத்தையும் போக்கு கீரைகளின் ராணி பரட்டை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR