ஆயுர் வேதத்தின் பொக்கிஷமாஜ கருதப்படும் மஞ்சள்  நம் சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மசாலா. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, பல சுகாதார நிபுணர்கள் இதை தொடர்ந்து சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதில்லை.எந்தெந்த நபர்கள் மஞ்சளை அதிகம் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம், இல்லையெனில் அவர்களின் உடல்நிலை மோசமடையக்கூடும். இதனை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.  மஞ்சளில் குர்குமின் உள்ளதால், பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. வலியை போக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை. இதைச் செய்யாவிட்டால், மஞ்சளால் ஏற்படும் பக்கவிளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.


நீங்கள் கீழ்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால் மஞ்சளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்:


1. நீரிழிவு நோயாளிகள்


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாக தங்கள் இரத்தத்தை மெல்லிதாக்கும் பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள், அதே போல் அவர்கள் குளுக்கோஸின் அளவையும் கட்டுப்படுத்த மருத்துகள் எடுத்துக் கொள்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் மஞ்சளை அளவிற்கு அதிகமாக உட்கொண்டால், அவர்களின் உடலில் இரத்தத்தின் அளவு கணிசமாகக் குறையும் வாய்ப்பு உள்ளது, இது உடலுக்கு நல்லதல்ல.


2. மஞ்சள் காமாலை நோயாளிகள்


மஞ்சள் காமாலை உள்ளவர்கள், மஞ்சள் காமாலையை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நீங்கள் மஞ்சள் சாப்பிட விரும்பினால், அதற்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுங்கள். இல்லையெனில் உங்கள் உடல்நிலை மோசமடையலாம். ஏனெனில் மஞ்சள் அதிகம் சாப்பிடுவதினால் சீரம் பிலிரூபின் அளவு அதிகரிக்கும். மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்ட பிறகும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மஞ்சள் உட்கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!


3. பித்தப்பையில் கல் உள்ள நோயாளிகள்


பித்தப்பையில் கல் மிகவும் சிக்கலான நோய், இந்த பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் மிகவும் வலியை சந்திக்க வேண்டும், இந்த விஷயத்தில், மஞ்சள் உட்கொள்வதை குறைக்கவும், இல்லையெனில் பிரச்சனை அதிகரிக்கலாம்.  அடிக்கடி கல் பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள், மஞ்சளை உட்கொள்வதால், இந்த பிரச்சனையை தீவிரபடுத்தும். எனவே, அவர்கள் மஞ்சளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. மேலும், அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.


4. இரத்தப்போக்கு அதிகம் உள்ள நோயாளிகள்


மூக்கில் அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் இரத்தப்போக்கு ஏற்படும் நிலை உள்ளவர்கள் மஞ்சள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும், இல்லையெனில் அளவிற்கு அதிகமான மஞ்சளால் இரத்தப்போக்கு அதிகரித்து உடலில் இரத்த சோகை ஏற்படலாம். இது பின்னர் பலவீனத்திற்கு காரணமாகிவிடும்.


(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ