இந்திய மசாலாப் பொருட்களில் பல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் வகையிலானவை. இவற்றில் ஒன்று இலவங்கப்பட்டை, இது உணவுக்கு  சுவை மற்றும் மணத்தை அளிக்கிறது. இலவங்கப்பட்டை ஆயுர்வேதத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது . இதன் இலைகள் மற்றும் பட்டைகளிலும் பல மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன. இலவங்கப்பட்டையை உபயோகிப்பதன் மூலம் பல விதமான வலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். எனவே இலவங்கப்பட்டை உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயிற்று வலி


உங்களுக்கு வயிற்றில் கடுமையான வலி இருந்தால், 5 கிராம் இலவங்கப்பட்டை பொடியை 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டால், வயிற்று வலி விரைவில் தீரும்.


பல்வலி


அடிக்கடி பற்களில் வலி  ஏற்பட்டால், இலவங்கப்பட்டை எண்ணெயை பருத்தியின் மூலம் பற்களில் தடவலாம். இதனுடன், உங்கள் பற்களின் வலி மிக விரைவில் நீங்கும். மேலும், நீங்கள் இலவங்கப்பட்டையின் 4-6 இலைகளை அரைத்து துலக்கலாம். இது உங்கள் பற்களை சுத்தமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


குடலிறக்க சிகிச்சை


குடலிறக்க சிகிச்சையிலும் இலவங்கப்பட்டை பயனுள்ளதாக இருக்கும், இதில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூளை ஒரு கப் தண்ணீரில் கலந்து இலவங்கப்பட்டை தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். கொதித்த பிறகு தேநீர் போல அதனை சூடாக உட்கொள்ள வேண்டும்.


தலைவலி


உங்களுக்கு அடிக்கடி தலைவலி (Headache) ஏற்பட்டால், நீங்கள் இலவங்கப்பட்டை சாப்பிடலாம். 8-10 இலவங்கப்பட்டை இலைகளை நன்றாக அரைத்து பேஸ்ட்டை செய்து தலையில் தடவினால், சளி, சூடு போன்றவற்றால் ஏற்படும் தலைவலி விரைவில் நீங்கும். 


ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!


இருமல்


நீண்ட நாட்கள் இருமல் தொல்லை நீடித்தால், இலவங்கப்பட்டை பொடியை 2 ஸ்பூன் தேனுடன் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், குணமாகும். இலவங்கப்பட்டை இலையை கஷாயம் செய்து குடிக்கலாம்.  கால் ஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை 1 டீஸ்பூன் தேனுடன் (Honey) கலந்து, ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட்டு வர, விரைவில் இருமல் குணமாகும்.


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


வாய்வு தொல்லை


அடிக்கடி வாய்வு தொல்லை ஏற்பட்டால், 5 கிராம் இலவங்கப்பட்டை பொடியை 1 தேக்கரண்டி தேனுடன் கலந்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க வேண்டும். தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வாயுத்தொல்லை விரைவில் குணமாகும்.


மூட்டுவலி 


இலவங்கப்பட்டை பொடியை ஒரு டீஸ்பூன் தேனுடன் காலை மற்றும் மாலையில் கலந்து சாப்பிட்டு வந்தால், சுமார் 7 நாட்களில் மூட்டுவலியில் இருந்து நிறைய நிவாரணம் கிடைக்கும். 


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR