வயது அதிகரிக்கும்போது சிறுநீரகங்கள் குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும். எனவே சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் உணவில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுக் கட்டுப்பாடுகளை கவனிக்காவிட்டால் சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.அப்படி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகள்: 


பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவை உலர்த்துதல், உப்பிடுதல், வெப்பத்தில் சூடுபடுத்துதல் போன்ற செயல்முறைகள் மூலம் பதப்படுத்தப்பட்டிருக்கும். அதனால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் வெளியேறிவிடும். பன்றி இறைச்சியை பதப்படுத்தி தயாரிக்கப்படும் பேக்கன், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி அல்லது கோழி இறைச்சியுடன் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் கலந்து தயார் செய்யப்படும் இறைச்சி, வகையான சாசேஜ் போன்றவற்றை சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் இருப்பவர்கள் நிரந்தரமாக தவிர்க்க வேண்டும். 


அடர் நிற சோடாக்கள்: 


இப்போது சோடாக்கள் பல்வேறு வண்ணங்களிலும், சுவைகளிலும் வெளிவருகின்றன. பெரும்பாலும் குளிர்பானங்களில் அதிக அளவு பாஸ்பரஸ் கொண்ட அடர் நிற சோடாக்கள் கலக்கப்படுகின்றன. 350 மி.லி. கொண்ட பானங்களில் 90 முதல் 180 மில்லி கிராம்வரை சோடாக்கள் சேர்க்கப்படுகின்றன. இது நீரிழிவு நோயாளிக்கு அனுமதிக்கப்படும் பாஸ்பரஸ் அளவை விட பல மடங்கு அதிகம். அடர் நிற சோடாக்கள் உணவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, இதய நோய்க்கு வித்திடக்கூடும். எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் அபாயத்தையும் அதிகரிக்கச் செய்யும். 


உலர் பழங்கள்: 


நீரிழிவு நோயாளிகள் உலர் பழங்களை தவித்துவிடுவது நல்லது. ஏனெனில் இந்த பழங்களை உலர வைக்கும் செயல்முறையின்போது அதிலிருக்கும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அவற்றினுள் சர்க்கரை, பொட்டாசியம் போன்ற தாதுக்கள்தான் அதிகம் உள்ளதால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பழங்களை அறவே தவிர்த்துவிட வேண்டும். ஏனெனில் அதிலிருக்கும் சர்க்கரை வேகமாக ஜீரணிக்கப்படுவது அவர்களின் உடல்நிலையை பாதிக்கலாம். 


பழச்சாறுகள்: 


நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட பழச்சாறு பானங்களில் சேர்க்கப்படும் சர்க்கரை, அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயனங்கள் போன்றவை ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்கின்றன. எனவே வீட்டிலேயே பழச்சாறு தயாரித்து அதில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவது நல்லது. எனினும் அடிக்கடி பருகக்கூடாது. எப்போதாவது ருசிக்கலாம். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR