Disadvantages Of Mangoes : சம்மர் சீசன் வந்தவுடன் அனைவருக்கும் இரண்டு விஷயம் நன்றாக கண்களுக்கு தெரியும். ஒன்று, கொளுத்தும் வெயில், இன்னொன்று சுவையான பல்வேறு வகை மாம்பழங்கள். சுவைக்காகவே, மாம்பழத்தை பலர், பழங்களின் ராஜா என்று கூறுகின்றனர். மாம்பழம், மாங்காய் வகை பழங்களில் எந்த பழங்களில் இல்லாத தனித்துவமான இனிப்பு-புளிப்பு சுவை இருக்கிறது என்பதை சொல்லித்தெரிய தேவையில்லை. நம் ஊரில் மாம்பழத்திற்கு பல கோடி பிரியர்கள் இருக்கின்றனர். எவ்வளவு மாம்பழம் சாப்பிட்டாலும் சரி, அவர்களுக்கு மாம்பழத்தை முழுமையாக சாப்பிட்ட உணர்வே இருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்று பெரியவர்கள் கூற கேள்வி பட்டிருப்போம். இது, மாம்பழத்திற்கும் பொருந்தும். ஒரு நாளில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாம்பழத்தினை சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? அதை பற்றி இங்கு பார்ப்போம். 


செரிமான கோளாறுகள்:


அதிக மாம்பழங்களை சாப்பிடுவது, செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஃபைபர் அதிகம் நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்று, மாம்பழம். இதை அதிகமாக சாப்பிடுவதால், வயிறு உப்பசமாவது, வாயு பிரச்சனை, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல வகை பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால், இது குறித்து பேசும் மருத்துவர்கள், மாம்பழத்தை குறைவான அளவிலேயே சாப்பிட வேண்டும் என்று எச்சரிக்கின்றனர். 


உடல் எடை அதிகரிப்பு:


மாம்பழம், உடல் எடை அதிகரிப்பிற்கும் வழி வகுக்கும் என சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம், மாம்பழத்தில் அதிக கொழுப்பு நிறைந்திருப்பதால்தான். மாம்பழத்தில் இயற்கை சர்க்கரை சத்துகள் நிறைந்திருக்கிறது. இது, உடலில் கலோரிக்களை அதிகரிக்க உதவும். 


ஒவ்வாமையை அதிகரிக்கும்:


மாம்பழம், ஒரு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அரிப்பு, சதைகளில் வீக்கம், உடலில் ஆங்காங்கே வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இதனால் ஏற்படலாம். இது, மாம்பழத்தினால் ஏற்படும் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். மாம்பழம் சாப்பிட்டவுடன் இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், உடனே சாப்பிடுவதை நிறுத்தவும். 


ரத்த சர்க்கரை அளவு:


உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாவதற்கும், மாம்பழம் சாப்பிடுவது காரணமாக அமையலாம். ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் அதிகமான மாம்பழம் சாப்பிடுவதால் இந்த பிரச்சனை ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சர்க்கரை நோய் கொண்டவர்கள், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் மாம்பழம் சாப்பிடுவது பிரச்சனையை ஏற்படுத்தலாம். 


வைட்டமின் நச்சுத்தன்மை:


மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்துகள் அதிகமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இது, ஒரு சில சமயங்களில் 'Hypervitaminosis'எனும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதனால் மயக்கம் ஏற்படுதல், தலை சுற்றல், குமட்டல், அதீத முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


உடலில் ஏற்கனவே இருக்கும் நாள்பட்ட நோய் பாதிப்பு காரணமாகவோ, அல்லது புதிதாக ஏற்பட்டிருக்கும் பிரச்சனையின் காரணமாகவோ ஏதேனும் மருந்துகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்னர் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லதாகும். 


சரும பிரச்சனைகள்:


மாம்பழம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிகமான மாம்பழங்களை சாப்பிடுவதால் முகம் உள்பட பல்வேறு உடல் பாகங்களில் பருக்கள் தோன்றலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ