கண் பராமரிப்பு: இந்த டிஜிட்டல் யுகத்தில், மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது, ஆனால் இவை நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றாலும், அவை நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. இந்த நவீன யுக கேஜெட்டுகள் குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவற்றின் திரை ஒளி நம் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இதனால் அனைத்து விதமான பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது போன்ற தவறான பழக்கவழக்கங்களால், நம் கண்கள் வலுவிழந்து, அதனால் தினமும் கண்களில் எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதுடன், கண்பார்வை பலவீனமடையும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், கண்களை ஆரோக்கியமாக வைத்து, கண் பார்வையை வலுவடையச் செய்யும் பொருட்களை  நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. ஆம்லா


ஆம்லா என்னும் நெல்லிக்காய் கண் பார்வைக்கு மிகச் சிறந்த  ஆதாரம். அம்லாவில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது. இதனால் கண்பார்வை வலுவடைகிறது. நெல்லிக்காயில் செய்யப்பட்ட நெல்லிக்காய் பொடி, சட்னி, ஊறுகாய் மற்றும் நெல்லிக்காய் மிட்டாய் போன்றவை கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நெல்லிக்காயை தினமும் உட்கொள்ள வேண்டும்.


2. பச்சைக் காய்கறிகள்


கண்பார்வையை மேம்படுத்த பச்சைக் காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். பச்சை காய்கறிகள் கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவற்றில் வைட்டமின் ஏ (கரோட்டின்), வைட்டமின் "சி" மற்றும் வைட்டமின் "பி" ஆகியவை காணப்படுகின்றன. பச்சைக் காய்கறிகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரும்பு மற்றும் லுடீன் போன்ற கூறுகள் கண்பார்வையை அதிகரிக்கும்.


3. அவகேடோ


அவகேடோவில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இதனை உட்கொள்வதால் கண்களின் விழித்திரை வலுப்பெறுவதோடு முதுமை வரை உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.


மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க


4. கேரட்


கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது கண்பார்வையை அதிகரிக்கிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.


5. கடல் உணவு


பல கடல் உணவுகள் கண்களை ஆரோக்கியமாக்குகின்றன. டுனா, சால்மன் மற்றும் ட்ரவுட் போன்ற கடல் உணவுகள் விழித்திரையை பலப்படுத்துகின்றன. இந்த மீன்களில் DHA எனப்படும் கொழுப்பு அமிலம் உள்ளது, இது விழித்திரையின் வலிமையை அதிகரிக்கிறது மற்றும் பார்வையை மேம்படுத்துகிறது.


6. சிட்ரஸ் பழங்கள்


வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம் மற்றும் கொய்யாவில் ஏராளமாக உள்ளது. வைட்டமின் சி கண்களுக்கு நன்மை பயக்கும்.


7. உலர் பழங்கள்


பாதாம், வாதுமை கொட்டை போன்ற உலர் பழங்கள் கண் பார்வையை மேம்படுத்தும். உலர் பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும். இதனால் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.


கண்கள் ஓய்வெடுக்க வழிகள்


தொடர்ந்து நீண்ட நேரம் திரையில் வேலை செய்வது பிரச்சனையை அதிகரிக்கும். நீண்ட நேரம் வேலை செய்வதற்குப் பதிலாக, இடையில் சிறிது ஓய்வெடுக்கவும். நேரமின்மை இருந்தால், 20-20 விதியைக் கடைப்பிடிப்பதன் மூலம் கண்களை ஓய்வெடுக்கலாம். இதற்காக, 20 நிமிடங்கள் திரையில் வேலை செய்த பிறகு, இடையில் ஓய்வு எடுத்து 20 விநாடிகள் திரையில் இருந்து விலகி இருக்க வேண்டும். அடிக்கடி கண்களை மூடி திறப்பது  கண்களின் அழுத்தத்தை குறைக்கிறது. கண்களில் எரிச்சல் இருந்தால், அடிக்கடி குளிர்ந்த நீரில் கழுவவும். கண்களைச் சுத்தம் செய்ய ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ