Neeraj Chopra Health Secret: தனது விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களை கவர்ந்த நட்சத்திர ஈட்டி எறிதலின் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, நேற்று முன்தினம் (ஆக. 27) மற்றொரு வரலாற்றை படைத்துள்ளார். நீரஜ் சோப்ரா உலக தடகள சாம்பியன்ஷிப் 2023 தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள தேசிய தடகள மையத்தில் ஈட்டி எறிதல் போட்டியில், நீரஜ் 88.17 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக, நீரஜ் வீசிய முதல் த்ரோ ஃபவுலாக மாறினாலும், இரண்டாவது வாய்ப்பிலேயே 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வரலாறு படைத்தார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் டிராக் மற்றும் பீல்டு பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது.


அந்த வகையில், நீரஜ் சோப்ரா 90 மீட்டர் இலக்கை அடைய கடுமையாக போராடி வருகிறார். நீரஜ் சோப்ரா தனது செயல்திறனை மேம்படுத்த ஆரோக்கியமான மற்றும் சீரான உணவைப் பின்பற்றுகிறார். அவர் தங்கள் ஒவ்வொரு காலையையும் தேங்காய் தண்ணீர் குடித்து தொடங்குவதாக கூறப்படுகிறது. இது நாள் முழுவதும் அவருக்கு ஆற்றலை அளிக்கிறது. 


அவர் பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவை சாப்பிடுகிறார். இது அவரின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அவர் தனது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்கிறார். நீரஜ் சோப்ராவின் உடற்தகுதி மற்றும் நாள் முழுவதும் ஆற்றலுடன் இருப்பதன் ரகசியம் தேங்காய் தண்ணீர் என கூறப்படுகிறது. காலையில் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம். 


மேலும் படிக்க | கூந்தலில் ஏகப்பட்ட பிரச்சனையா? அப்போ இந்த ஒரு விதை மட்டும் போதும்


காலையில் வெறும் வயிற்றில் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்


நீரேற்றம்


தேங்காய் தண்ணீர் ஒரு நல்ல எலக்ட்ரோலைட்டின் மூலமாகும், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது மிகவும் முக்கியமானது, இரவு முழுவதும் தூங்கும் போது உடலில் இருந்து தண்ணீர் இழக்கப்படுகிறது. எனவே, காலையில் தேங்காய் தண்ணீர் அருந்துவதின் மூலம் மீண்டும் புத்துணர்ச்சி பெறுவீர்கள். 


ஆற்றல்


தேங்காய் நீரில் இயற்கையான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. இது காலையில் எழுந்தவுடன் சோர்வை நீக்கி, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.


செரிமானம்


தேங்காய் நீரில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை தடுக்க உதவும்.


நோய் எதிர்ப்பு சக்தி


தேங்காய் நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களை எதிர்த்து போராடவும் உதவும்.


எடை கட்டுப்பாடு


தேங்காய் நீரில் கலோரிகள் குறைவாக இருப்பதால், நீண்ட நேரம் முழுதாக உணர உதவும். எடையைக் கட்டுப்படுத்த இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ