உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் சுமார் 10 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் இதற்கான முக்கிய காரணம். இந்த நோய் வராமல் எப்படி தடுப்பது என்பது குறித்த ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி, சரியான நேரத்தில் உணவை சாப்பிடுவதும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கை முறையில் மாற்றம் அவசியம்


நீரிழிவு நோய் உலகளவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இது ஒரு வாழ்க்கை முறை நோய் என்பதால், வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் மட்டுமே இதைத் தவிர்க்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். நீரிழிவு நோயைத் தடுக்க, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது மிகவும் முக்கியம்.


உணவு உண்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு நீரிழிவு அபாயம் அதிகரிக்கிறது.  ஏனெனில் நீரிழிவு நோய் குறித்த சமீபத்திய ஆய்வின்படி, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதே சமயம் நீங்கள் சரியான நேரத்தில் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வராது. இந்த ஆய்வின்படி, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதுடன், சரியான நேரத்தில் உணவை சாப்பிடுவது (Health Tips) மிகவும் முக்கியம்.


உணவு நேரத்தை முடிவு செய்யுங்கள்


நீங்கள் காலை, மதியம், சிற்றுண்டி, இரவு உணவுகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட வேண்டும். ஒவ்வொரு உணவிற்கும் இடையே ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியை வைத்திருப்பது உடலில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் இதன் மூலம் உங்கள் எடையும் கட்டுப்படுத்தப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், உங்கள் எடையைக் குறைக்கலாம் மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்கலாம். இது டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.


மேலும் படிக்க | பப்பாளி பழத்தை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்... வலுவான 10 காரணங்கள் இதோ...


நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க செய்ய வேண்டியவை


ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் உணவு உண்பது, உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, டைப் - 2 நீரிழிவு நோய் வருவதற்கான அதிக ஆபத்தில் உள்ளவர்கள், அவர்கள் சாப்பிடும் நேரத்தில் கவனம் செலுத்தி, சாப்பிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.


இது தவிர, ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது HbA1C அளவை கணிசமாக மேம்படுத்துகிறது. இதற்கு இரவு உணவை 8 மணிக்கு சாப்பிட்டுவிட்டு மறுநாள் காலை 7 மணிக்கு மேல் காலை உணவை சாப்பிடலாம். இப்படி செய்வதன் மூலம் உடலில் பல நல்ல மாற்றங்களை காணலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Clove Benefits: மன அழுத்தம் முதல் வெயிட் லாஸ் வரை... கிராம்பு என்னும் சிறந்த ஆயுர்வேத மருந்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ