இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூத்த மகனும், அரண்மனை வாரிசுமான இளவரசர் சார்லஸ் புதிய கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை முடிவு பெற்றுள்ளார் என்று அவரது அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

71 வயதான அவர் COVID-19-ன் லேசான அறிகுறிகளை பெற்றுள்ளார் எனவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. என்றபோதிலும் 72 வயதான கிளாரன்ஸ் சீமாட்டி கமிலா கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனவும் அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


சார்லஸ் மற்றும் கமிலா இப்போது பால்மோரலில் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிளாரன்ஸ் ஹவுஸ் தெரிவித்துள்ளது. மேலும் இளவரசர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியா வேலை செய்து வருவதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பான ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையில்,. "அரசாங்க மற்றும் மருத்துவ ஆலோசனைகளின்படி, இளவரசரும், இளவரசியும் இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.


சோதனைகள் அபெர்டீன்ஷையரில் NHS ஆல் மேற்கொள்ளப்பட்டன, அங்கு அவை சோதனைக்குத் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்தன.


இளவரசர் சமீபத்திய வாரங்களில் தனது பொதுப் பணிகளில் அதிக எண்ணிக்கையிலான ஈடுபாடுகளைச் செய்ததால் யாரிடமிருந்து வைரஸைப் பெற்றார் என கண்டுபிடிக்கவில்லை" எனவும் குறிப்பிட்டுள்ளது.