ஆங்கிலத்தில், “an apple a day keeps the doctor away” என்று ஒரு பழமொழி இருக்கிறது. இதற்கு அர்த்தம் ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நாம் மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்பதுதான். நாம் சாப்பிடக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஹெல்தியான பழங்களுள் ஒன்று ஆப்பிள். ஒரு ஆப்பிளில் 60 கலோரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது உடலில் நல்ல கொழுப்பை சேர்க்க உதவும் என்றும் மருத்துவர்கள் சொல்லப்படுகிறது. இதில் உள்ள பைபர் சத்துக்கள் மற்றும் நீர் சத்துக்கள் உடலை நீரேற்றுத்துடன் விற்கிறது. ஆப்பிள் பழத்தால் உடலில் ஏற்படும் ஏழு மேஜிக் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.ரத்த சர்க்கரை அளவு: 


நாம் அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிடும்போது நம் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையின் அளவு அதிகமாக கூறப்படுகிறது. சர்க்கரை இல்லாத அதிக பொருளும் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது கூட சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். ஆனால் ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது இது நிகழ்வதில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் கூட ஆப்பிளை சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட ஆப்பிள் சாப்பிடுபவர்களை 28% பேர் டைப் 2 டயாபடீஸ் நோயிலிருந்து தப்பி உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 


2.கொழுப்பை குறைக்கும்:


உடலில் அதிக கொழுப்பை கொள்வது இதய நோய் பாதிப்புகள் கொண்டு சென்று விட்டு விடும். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை கொலஸ்ட்ரால், தடை செய்வதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நாம் கொழுப்பை குறைக்க ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கப்படுகிறது. 


3.ரத்த அழுத்தத்தை குறைக்கிறது: 


ரத்த அழுத்தம் அதிகரிக்கையில் நம் உடலில் செல்லும் ரத்த ஓட்டங்கள் இரத்த நாளங்களை பாதிப்படைய செய்யலாம். மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய் ஆகியவை இதனால் உண்டாக்கலாம். இதை தவிர்க்க நாம் சில பிரத்தியேக டயட் இருக்க வேண்டி இருக்கிறது. இந்த டயட்டில் கண்டிப்பாக நாம் ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 


4.அழச்சியை தடுக்கும்:


அழற்சி எதிர்ப்பு காரணமாக நம் உடலில் இருக்கும் பாதிப்படைந்த திசுக்கள் சரியாகலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும் அழற்சியினால் நம் உடலில் நோய் பாதிப்புகளும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றர். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால், இந்த அழற்சி எதிர்ப்பை அதிகம் ஆவதிலிருந்து தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் ஆப்பிள் சாப்பிடுவதால் கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் எனக்கூறப்பட்டுள்ளது. 


5.பசி உணர்வை கட்டுப்படுத்தும்:


ஆப்பிளில் தண்ணீர் மற்றும் ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இதனால், இது, வயிற்றை நிரப்பும் ஒரு ஆரோக்கிய ஸ்நாக்ஸாக இருக்கிறது. மேலும், ஆப்பிள் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும். இதனால் அதீத பசி உணர்வு ஏற்படுவதையும், அந்த பசியினால் நாம் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். 


(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு Zee News பொறுப்பேற்காது)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ