கண்களைச் சுற்றி மஞ்சள் கட்டிகள்: அதிக கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கிறது. இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, மூன்று நாள நோய் (ட்ரிப்பிள் வெசல் டிசீஸ்) மற்றும் கரோனரி தமனி நோய் (கரோனரி வெசல் டிசீஸ்) போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு பலருக்கு உள்ள பொதுவான பிரச்சனையாக உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் ஏற்படும் பல பிரச்சனைகளால் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடலில் கொலஸ்ட்ராலின் அதிகரிப்பை இரத்த பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்றாலும், ஆரம்ப கட்டத்தில், கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது நமது உடலும் நமக்கு பல வித அறிகுறிகளை அளிக்கின்றது. இந்த அறிகுறிகளை நாம் புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். இல்லையெனில் பல வித இழப்புகளையும் உடல் உபாதைகளையும் நாம் அனுபவிக்க நேரிடலாம். 


அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள் கண்களில் காணப்படும்


உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்வதற்கான எச்சரிக்கை அறிகுறிகளை கண்கள் மூலம் அறியலாம். உங்கள் கண்களைச் சுற்றி மஞ்சள் கட்டிகள் அல்லது இந்த நிறத்தின் புள்ளிகள் காணப்பட்டால், அது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Xanthelasma


கண்களுக்கு அருகில் மஞ்சள் கட்டிகள் இருப்பது ஒரு பெரிய பிரச்சனையாகும். இது சாந்தெலஸ்மா (Xanthelasma) என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக எதிர்காலத்தில், ஹைப்போ தைராய்டிசம் அல்லது கல்லீரல் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.


மேலும் படிக்க | சுகர் கிடுகிடுவென ஏறிப் போச்சா? உடனே குறைக்க இதை சாப்பிடுங்க



உடனடியாக பரிசோதனை செய்யவும்


கண்களின் மேல் மற்றும் கீழ் கண் இமைகளில் மட்டுமல்லாமல் உள் மூலைகளிலும் கொலஸ்ட்ரால் படிவுகள் ஏற்படுகின்றன. இவை ஆபத்தான தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவை காலப்போக்கில் பெரிதாகத் தொடங்குகின்றன. இதுபோன்ற அறிகுறிகள் உடலில் தோன்றத் தொடங்கும் போதெல்லாம், அதை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இந்த அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக இதற்கான நிபுனத்துவன் பெற்ற நிபுணர் மருத்துவரிடம் காண்பித்து, விரைவில் லிப்பிட் ப்ரொஃபைல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உடனடியாக பரிசோதனை செய்துகொண்டால் பிரச்சனைகள் அத்கரிக்காமல் தவிர்க்கலாம். 


Xanthelasma: ஆபத்து காரணிகள்


சாந்தெலஸ்மா அல்லது கண்களுக்கு அருகில் கொலஸ்ட்ரால் குவிவது, ஏற்கனவே உடலில் சில குறிப்பிட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு அதிக தீங்கு விளைவிக்கும். இந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 


- பருமனான மக்கள்
- புகைப்பிடிப்பவர்கள்
- பெண்கள்
- உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள்
- நீரிழிவு நோயாளி
- லிப்பிட் அளவு அதிகமாக இருப்பவர்கள்
- 30 முதல் 50 வயதுடையவர்கள்


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Diabetes: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் பானங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ