வானிலை மாறும்போது நமக்கு வரும் நோய்களை எப்படி கவனித்து கொள்ளவேண்டும் என்ற வழிமுறைகள் பார்ப்போம்..!

 

மருத்துவமனைகள் நிரம்பி வழியும் இந்த பருவ காலத்தில் நோய் வரும் முன்னர் காக்கும் தடுப்பு மருந்தாகவும் வந்த பின்னர் நோயைத் தீர்க்கும் அருமருந்தாகவும் இரண்டு வேலைகளை செய்கிறது நிலவேம்பு. நிலவேம்பு செடி இரண்டு முதல் மூன்று அடி வரை நிமிர்ந்து வளர்கிறது. மலை, மண் வளம் உள்ள இடங்களில் எளிதாக வளரக் கூடியது. 

 

திடீரென பன்றிக் காய்ச்சல், டோங்கு காய்ச்சல் என்று தெரியும் பொது நாம் பயப்பட தேவையில்லை. அதற்கு மருந்து உண்டு அதுதான் நிலவேம்பு காசாயம் இதை குழந்தைகள், பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். வேறு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடும்போது இந்த நிலவேம்புக் குடிநீரை அருந்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமே என்று பயப்படத் தேவையில்லை. எந்தப் பாதிப்பும் ஏற்படாது. 

 

 

நிலவேம்பு எங்கு கிடைக்கும் : எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. அரசு சித்த மருத்துவ நிலையங்களில் இலவசமாகவே கொடுக்கிறார்கள். சில தனியார் மருந்துக் கடைகளிலும் விற்கப்படுகிறது. 

 

நிலவேம்பு, மிளகு, கோரைக் கிழங்கு, பற்படாகம், விலாமிச்சைவேர், சந்தனத்தூள், சுக்கு, வெட்டிவேர், பேய்புடல் ஆகியவை சேர்ந்ததுதான் இந்தக் கஷாயத்தை 9 கூட்டுமருந்துகள் கலந்து சித்த மருத்துவர்கள் கொடுப்பார்கள். 

 

எந்த விஷக்காய்ச்சலாக (Viral Fever) இருந்தாலும் நிலவேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரஸையும் முழுமையாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டுவலியும் காணாமல் போய் விடும். 

 

காய்ச்சல் வந்தவுடன் பலரும் ஆங்கில மருத்துவத்தையே தேடுவார்கள். உங்கள் திருப்திக்காக ஆங்கில மருத்துவம் எடுத்துக் கொள்ளும்போது நிலவேம்பு குடி நீரையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். எந்த பக்க விளைவும் கிடையாது. 

 

நிலவேம்பின் மொழி மற்றும் பெயர்கள் என்ன : 

 

English name : Green chirayta, creat, king of bitters, andrographis, India echinacea

 

Hindi name : Kirayat 

 

Kannada name : Nelabevu

 

Malayalam name : NilavEpp, Kiriyathth

 

Telugu name : Nelavemaa

 

Konkani name : Kiratin

 

Tamil name : Siriyaa Nangai, Nila Vembu சிறியா நங்கை, நிலவேம்பு

 

பனி, மழைக்கு பயந்து வீட்டிலேயே நம்மால் உட்கார்ந்திருக்க முடியாது. ஆனால், இந்த பருவத்திலும் எங்கள் வீட்டில் யாருக்கும் உடல்நலக் குறைவு இல்லை என்று சொல்லும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்க நிலவேம்பு நமக்கு உதவி செய்யும். நிலவேம்பு கசப்பு அதிகம் கசப்பைப் போக்க கொஞ்சம் சர்க்கரை, வெல்லம், தேன் என ஏதாவது ஒன்றை கலந்து காய்ச்சி தேநீர் போலவும் பயன்படுத்தலாம்.

 

நிலவேம்பு காய்ச்சி அருந்தவதானால் ஏற்படும் நன்மைகள் மருத்துவ பயன்கள் : 

 

உடல் ஆரோக்கியம் பேரும்.

 

நீரிழிவு உள்ளவர்கள் இனிப்பு சேர்க்காமல் சாப்பிட்டுக் கொள்ளவது நல்லது.

 

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்

 

காய்ச்சல் இல்லாத வர்களும் தடுப்பு மருந்தாக இரண்டு ஸ்பூன் அளவு சாப்பிட்டுக் கொள்ளலாம். 

 

வெப்பத் தன்மையை உண்டக்கும்.

 

பசியை உண்டாக்கும்

 

உடல் தாதுக்களைப் பலப்படுத்துகிறது.

 

நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது.

 

தேன் ஒரு சிறந்த மருந்து என்பதால் தேனுக்கு முன்னுரிமை கொடுப்பது இன்னும் நல்லது. 

 

காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வுக்கு நிலவேம்பு நீர் குணப்படுத்தி விடும்.  

 

மயக்கம் போன்றவை குணமாகும்.

 

புத்தி தெளிவு உண்டாகும். 

 

நிலவேம்பு எப்படி தயாரிப்பது : கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். இந்த தண்ணீர் மூன்றில் ஒரு பங்காக சுண்டிய பிறகு, வடிகட்டி சாப்பிடலாம். காய்ச்சல் இருப்பவர்கள் காலை, இரவு என இரண்டு வேளை தலா 60 மி.லி. சாப்பிட்டால் போதும். நோய் தீர்ந்து விடும்.