உப்பு குறைவான உணவுகள் ஆயுளைக் கூட்டும்: உப்பைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​உணவைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள், தங்கள் ஆயுளை தாங்களே குறைத்துக் கொள்கிறார்கள் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவில் அதிக உப்பு சேர்ப்பதால் பெண்களுக்கு சுமார் ஒன்றரை ஆண்டுகளும், ஆண்களுக்கு இரண்டு ஆண்டு என்ற அளவுக்கு ஆயுள் குறைகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஐந்து லட்சம் மக்களிடம் எடுத்த ஆய்வு முடிவுகள் இவை.


நடுத்தர வயது மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் உப்பு சேர்ப்பதற்கும் அகால மரணத்திற்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், சமையலின் போது பயன்படுத்தப்படும் உப்பு இந்த பகுப்பாய்வில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சராசரியாக ஒன்பது ஆண்டுகள் கண்காணிக்கப்பட்ட UK Biobank ஆய்வில் பங்கேற்பாளர்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த தரவுகள், ஆரோக்கியம் தொடர்பான எச்சரிக்கைக்கு போதுமானதாக இருப்பதாக ஆராய்ச்சிக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | உப்பில் இத்தனை பக்க விளைவுகளா: ஒரு நாளில் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?


அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் லு குய் என்பவரால் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.


உணவில் உப்பு சேர்ப்பதற்கும் அகால மரணத்திற்கும் இடையிலான உறவை மதிப்பிடும் முதல் ஆய்வு எங்களுடையதாகத்தான் இருக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.



"சோடியம் உட்கொள்ளலில் மேற்கொள்ளும் சிறிய அளவிலான குறைப்பும்கூட, ஆரோக்கிய நன்மைகளை குறிப்பிடத்தக்க அளவு ஏற்படுத்தும்" என்று லு குய் தெரிவித்தார்.


உப்பைப் பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, ​​உணவைத் தொடர்ந்து உட்கொள்பவர்கள், சீக்கிரமாக  இறந்துவிடுவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.


மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கான நம்பர் 1 ஜூஸ்: விலையும் மலிவு


தொடர்ந்து உப்பைச் சேர்க்கும் ஆண்களும் பெண்களும் 50 வயதுக்கு பிறகு ஆரோக்கிய சவால்களை அதிகமாக எதிர்கொள்கின்றனர். அவர்களின் ஆயுட்காலம் குறைவதற்கு உப்பின் அதிக நுகர்வு முக்கியமான காரணமாக இருக்கிறது.


வயது, பாலினம், இனம், பற்றாக்குறை, உடல் நிறை குறியீட்டெண், புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் செயல்பாடு, உணவு மற்றும் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற மருத்துவக் கோளாறுகள் உட்பட பல காரணைகளும் இந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டன. 


உப்பு நமது உணவின் ஒரு முக்கிய அங்கமாகும். இது நமது உணவின் சுவையை அதிகரிக்கிறது. உணவில் உப்பு குறைவாக இருக்கலாம், ஆனால் உப்பு இல்லாமல் நாம் சாப்பிடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. 


இருப்பினும், ஆயுட்காலம் குறைவதைத் தவிர, அதிக உப்பை உட்கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிக சோடியம் உடலில் சேரும்போது, ​​அதை ஜீரணிக்க சிறுநீரகங்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டியிருப்பதால், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படும்.


 முகத்தில் வீக்கம் தோன்றுவதற்கும் கைகள் மற்றும் கால்களில் வீக்கம் அதிகரிப்பதற்கும் கூட அதிக உப்பு காரணமாக இருக்கிறது. 


மேலும் படிக்க | அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின் பி கேன்சரை உருவாக்கும்: ஆண்களுக்கான எச்சரிக்கை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR