மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தால், அவரது வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து விடுபடுவது கடினமாகும். இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக இருந்தால், சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால், காலப்போக்கில் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை ஒருவர் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இந்த மருந்துகள் பல புதிய நோய்களை உருவாக்குகின்றன. எனவே நாம் நீரிழிவு நோயை இயற்கை முறைகளாலும் கட்டுப்படுத்தலாம். நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சிறிது பொடி செய்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இப்போது நாம் சர்க்கரை நோயை எந்தெந்த பொருட்களின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லிக்காய் பொடி: நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேலை செய்கின்றன. எனவே நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 


மேலும் படிக்க | Uric Acid:கால்களில் இந்த பிரச்சனை இருக்கா? யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கலாம் 


வெந்தயப் பொடி: வெந்தய விதைகள் நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும். வெந்தயத்தை அரைத்து பொடி செய்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் எளிதாக கட்டுக்குள் வரும். வெந்தயம் உடலில் இன்சுலினை அதிகரிக்க உதவுகிறது, எனவே இது நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 


இலவங்கப்பட்டை தூள்: இலவங்கப்பட்டையில் இயற்கையான பயோஆக்டிவ்கள் உள்ளன, அவை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இலவங்கப்பட்டையை பொடி செய்து உலர வைக்கவும். மேலும் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் இந்த பொடியை சாப்பிடு வரவும்.


முருங்கைக்காய் பொடி: முருங்கை சர்க்கரை நோய்க்கு நன்மை பயக்கும். இதன் பழங்கள், பூக்கள், தண்டுகள் மற்றும் இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஆயுர்வேத பண்புகளைக் கொண்டுள்ளன. அந்த வகையில் முருங்கை இலையை பொடியாக அரைத்து சாப்பிடலாம், இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலனை தரும்.


நாவல் பழ விதை தூள்: நாவல் பழத்தில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளது. அதனால் இதன் விதைகள் சர்க்கரை நோய்க்கு நன்மை பயக்கும். இதன் விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஏராளமாக உள்ளன. எனவே இதன் விதைகளை பொடி செய்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ