சாப்பிட்டபின் நம்மை அறியாமல் செய்யும் சில தவறுகள், ஆரோக்கியத்தில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ ஆய்வுகள் பலவற்றில், உணவு உண்ட பின் செய்யக்கூடாத சில விஷயங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாப்பிட்ட பின் செய்யும் விஷயங்களில், குட்டி தூக்கம் போடுவது, புகைபிடிப்பது, மது அருந்துவது, இனிப்புகள் சாப்பிடுவது என்பது போன்ற சில பழக்கங்களை பலர் பின்பற்றும் வழக்கம் உள்ளது. இந்நிலையில், சாப்பிட்ட பின் செய்யவே கூடாது என்பது போன்று சில விஷயங்கள் குறித்து உணவியல் நிபுணர்கள் (Health Tips) கூறுவதை அறிந்து கொள்ளலாம்.


சாப்பிட்ட பின் புகை பிடிக்கும் பழக்கம்


சாப்பிட்டபின் புகைபிடிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக எந்த நேரத்தில் புகைப்பிடிப்பதும் உடல் நலத்திற்கு பெரும் கேடு விளைவிப்பது தான். அதிலும் சாப்பிட்ட பின் புகைபிடிப்பது என்பது, செரிமானத்தை பாதித்து, அஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும். அதோடு உடல் உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்காது.


சாப்பிட்டபின் உறங்கும் பழக்கம்


சாப்பிட்டவுடன் ஒரு குட்டி தூக்கம் போடுவது, பலருக்கும் மிகவும் பிடித்த விஷயம். ஆனால் அஜீரணத்துக்கு இது முக்கிய காரணம் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் உடல் பருமன் ஏற்படுவதற்கு இது முக்கிய காரணமாக அமைந்து விடும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.


சாப்பிட்ட பின் உடற்பயிற்சி செய்யும் பழக்கம்


சாப்பிட்ட பின் தூங்குவது எவ்வாறு ஆரோக்கியத்தை பாதிக்குமோ, அதே போன்று சாப்பிட்ட பின் உடற்பயிற்சி மேற்கொள்வது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு, வயிற்று பிடிப்பு போன்ற பிரச்சனையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் மேற்கொள்வதே சிறந்தது. நேரமின்மையை காரணம் காட்டி, உணவு உண்ட பிறகு செய்வது மிகவும் தவறான பழக்கம்.


சாப்பிட்ட பின் குளிக்கும் பழக்கம்


குளித்த பின் சாப்பிடுவது தான் சரியான பழக்கம். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஆனால் சாப்பிட்டு முடித்தவுடன் குளிப்பதால் செரிமான சக்தி பெரிதும் பாதிக்கப்படும். சாப்பிட்டபின் குறைந்தது 2 மணி நேர இடைவெளிக்குப் பிறகு குளிக்க வேண்டும்.


சாப்பிட்ட பின் டீ காபி அருந்தும் பழக்கம்


சாப்பிட்ட பின் டீ அல்லது காபி அருந்தும் பழக்கம் நம்மில் பெரும்பாலோனோருக்கு இருக்கும். இது மிகவும் தவறு. ஏனெனில் காபி, டீ யில் உள்ள ஆக்ஸுலேட் மற்றும் பைலட் உணவில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்து விடும். இதனால் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


சாப்பிட்ட பின் பழம் சாப்பிடும் பழக்கம்


சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கும். சாப்பாட்டிற்கு பின்னர், பழங்கள் செரிமானத்திற்கு தேவையான என்சைம்கள் உடனே சுரக்காது என்பதால், பழங்கள் சரியாக ஜீரணம் ஆகாமல், உடலில் கழிவாக தங்கி விடும் வாய்ப்பு உண்டு என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.


சாப்பிட்ட பின் உணவு ஜீரணமாக, படுத்துக்கொள்ளாமல், சிறிது நேரம் சாதாரணமாக நடை பயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது அமர்ந்து கொண்டே சிறிது நேரம் புத்தகம் படிப்பது, குடும்பத்தினருடன் சிறிது பேசிக் கொண்டிருப்பது ஆகியவற்றின் மூலம் பொழுதை கழிக்கலாம்.


பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் ஏற்படாமல் இருக்க... செய்ய வேண்டியதும்.. செய்யக் கூடாததும்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ