மனதை மயக்கும் சுவையான உணவுக்கு கட்டியம் கூறும் மணம் கொண்ட ஏலக்காய் என்று பெயர் பெற்ற மசாலா, உடலாரோக்கியத்திற்கு கெடுதலையும் செய்யும் என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது நறுமண மசாலாவுக்கும் பொருந்தும்.ஏலக்காய் சாப்பிட்டால் சிலருக்கு ஏற்கனவே இருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகரிக்கலாம், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்தவொரு உணவுப் பொருளாக இருந்தாலும் அதற்கென சில நன்மை தீமைகள் உள்ளன. ஏலக்காயை உட்கொள்வதால் பல நன்மைகள் இருந்தாலும் அதில் தீமைகளும் உள்ளன. ஆரோக்கியமான உணவு மசாலாவாக இருந்தாலும், ஏலக்காயை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை எப்படி புரிந்துக் கொள்வது?
 
ஏலக்காயை சாப்பிடுவதால் ஏற்படும் முக்கிய தீமைகள்
வாசனை மற்றும் இனிப்பு சுவை காரணமாக, பச்சை ஏலக்காய் இனிப்புகள் முதல் ஐஸ்கிரீம்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது. பச்சை ஏலக்காய் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்பட்டு வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.  ஏலக்காயில் பல மருத்துவ குணங்களும் உள்ளன, இது பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.


ஆனால், பச்சை ஏலக்காயை உட்கொள்வதால் அதிலும் குறிப்பாக அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்ன என்பதைத் தெரிந்துக் கொள்வோம். அதிலும் குறிப்பாக, ஏற்கனவே ஆரோக்கிய குறைபாடுகள் இருப்பவர்களுக்கு ஏலக்காய் நுகர்வு மேலும் பிரச்சனையை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | வியக்க வைக்கும் காளான்... உடல் பருமன் முதல் வலுவான எலும்புகள் வரை..!
 
இரத்த அழுத்தம் குறைவது
உயர் இரத்த அழுத்தத்தைப் போலவே, குறைந்த இரத்த அழுத்தமும் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் நிலை ஆகும். ஏற்கனவே இரத்த அழுத்தம் குறைவாக இருப்பவர்கள், ஏலக்காய் டீ குடிப்பது பிரச்சனையை அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் பச்சை ஏலக்காயை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், அடிக்கடி ரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கம் காணப்படும்.


மருந்துகளுடன் கூட்டு சேரக்கூடாத ஏலக்காய்
மருந்துகளுடன் பச்சை ஏலக்காய் ஒத்துப் போகாது. அது கடுமையான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, நீரிழிவு, தைராய்டு போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகளை உட்கொள்பவர்கள், பச்சை ஏலக்காயை உட்கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டால், ஏலக்காயை அளவுடன் உட்கொள்ளவும்.


ஒவ்வாமை எதிர்வினை
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் ஏலக்காயில் காணப்படும் சில கூறுகள் அரிப்பை அதிகரிக்கும். தொண்டையில் வீக்கத்தை அதிகரிப்பதோடு, சுவாசப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
 
வயிறு தொடர்பான பிரச்சனைகள்
பச்சை ஏலக்காயை அதிகமாக உட்கொள்வது செரிமான அமைப்பை பாதிக்கும். ஏப்பம், வாயு, அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


ஹார்மோன் சமநிலையின்மை
உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை சமநிலைப்படுத்துதல் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்கள், ஏலக்காயை தவிர்க்க வேண்டும். சில ஆய்வுகளின்படி, ஏக்காயில் உள்ள சில தனிமங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. வாந்தி, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை ஏலக்காய் ஏற்படுத்தும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 90 கிட்ஸ்கான யூரிக் அமில அலர்ட்! இந்த அறிகுறியெல்லாம் இருக்கா? டோண்ட் ஒர்ரி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ