நியூயார்க்: ’41 வயதில் இவ்வளவு இளமையா?’ என்ற சந்தேகத்தினில் பெண் ஒருவரினை விமானத்தில் பயனிக்க நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நட்டாலியா டெசன்கு என்ற பெண்மனி துருக்கியில் இருந்து தனது வீட்டிற்கு விமானம் மூலம் பயணம் செய்ய விமான நிலையம் வந்தார். அப்போது பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் அவரை தடுத்துள்ளனர். 


இதற்கு காரணமாக அவர்கள் கூறியதாவது “அவர் கொண்டுவந்த பாஸ்போட்டினில் வயது 41 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர் மிகவும் இளமையாக இருக்கின்றார், எனவே அவர் வேரொருவருடைய பாஸ்போட்டினில் பயனிக்க முயற்சிக்கின்றார் என்ற சந்தேகத்தினில் அவரை தடுத்தனர்” என தெரிவித்தனர்.


எனினும் இதுகுறித்து அப்பெண்மனி கூறுகையில் "என்னுடைய இந்த இளமைத் தோற்றத்தால் பலரும் என்னை வர்னித்துப் புகழ்ந்துள்ளனர், ஆனால் அந்த தோற்றமே எனக்கு ஆபத்தாய் அமையும் என நான் எதிர்பார்க்க வில்லை" என்று அவர் கூறினார்.


இந்த அழகு தோற்றத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ள நட்டாலியா, தனது அழகு ரகசியத்தை பற்றி தெரிவிக்காத போதிலும் ”சைவ உனவுப் பழக்கம், பழங்கள் மற்றும் காய்கறிகள் தான் அவருடைய அழகின் ரகசியம்” என அவரது ரசிகர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.