அனைத்து மருத்துவ சாதனங்களையும் ஒரே ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்காக மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து மருத்துவ சாதனங்களையும் ஒரே ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான நோக்கத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அனைத்து மருத்துவ சாதனங்களும் சில தரமான தரங்களை பூர்த்தி செய்யும் வகையில், அரசாங்கம் ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.


முன்மொழியப்பட்ட வரைவு அறிவிப்பின்படி, மனிதர்கள் அல்லது விலங்குகள் மீது பயன்படுத்தப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் “drugs” என்ற வகைக்குள் வந்து மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும்.


இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் அனைத்து மருத்துவ சாதனங்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனைக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சான்றிதழ் வழங்க வேண்டும்.


"மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டம், 1940-ன் பிரிவு 3-ன் பிரிவு (பி) இன் உட்பிரிவின் (iv) படி, மத்திய அரசு, மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர், மனித பயன்பாட்டில் பயன்படுத்த விரும்பும் பின்வரும் சாதனங்களை இதன்மூலம் குறிப்பிடுகிறது. மனிதர்கள் அல்லது விலங்குகள் மருந்துகள் மீது இச்சட்டம் 2019 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்” என்று வரைவு அறிவிப்பு தெரிவிக்கிறது.


மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் தொடர்பான தொழில்நுட்ப பிரச்சினைகள் குறித்த நாட்டின் மிக உயர்ந்த ஆலோசனைக் குழுவான மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (DTAB) ஏப்ரல் மாதத்தில் அனைத்து மருத்துவ சாதனங்களையும் மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் மருந்துகளாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.


"தரம் ஒழுங்குபடுத்துவதே இதன் நோக்கம், இதனால் அவை தர அளவில் சில தரங்களை பூர்த்தி செய்கின்றன. இது தவிர மருத்துவ சாதன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் தரம் மற்றும் பாதுகாப்பிற்கு பொறுப்புக் கூறும்” என்று மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் இரண்டாவது முறையாக அமைந்துள்ள நிலையில்., மருத்துவ வினியோகம், மருத்துவ சாதனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அமைச்சகத்தின் நிகழ்ச்சி நிரலில் அதிகமாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.