சில வீட்டு முறைகள் மூலம் நீங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம், ஆனால் இதற்காக நீங்கள் முதலில் உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். உண்மையில், பெரும்பாலான மக்கள் மோசமான உணவுப் பழக்கத்தால் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சிலர் இயற்கையான முறைகளால் இரத்த சர்க்கரை அளவை குறைக்க விரும்புகிறார்கள், ஆனால் அதே நேரத்தில் சிலர் மருந்துகளை நம்பியிருக்கிறார்கள். எனவே இயற்கை முறைகள் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரத்த சர்க்கரையின் அறிகுறிகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது, சோர்வு, தலைவலி, மங்கலான பார்வை மற்றும் தலை பாரத்துடன் இருப்பது போன்று இருக்கும். உடலில் சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும் நேரம், எப்போதுமே பசியுடன் இருப்பது போன்று உணரக்கூடும். போதிய அளவில் தண்ணீர் பருகாமல் இருந்தால், உடலானது வறட்சியடைய ஆரம்பிக்கும். மறுபுறம், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது நடுக்கம், பசி, வியர்வை, அமைதியின்மை மற்றும் எரிச்சல் ஆகியவை உணரப்படுகின்றன.


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிகமான பாராசிட்டமால் மருந்தால் மரணம் கூட சம்பவிக்கலாம்!


துளசி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்
துளசியைக் கொண்டு இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த முடியும் என்பது மிகச் சிலரே அறிந்திருப்பார்கள். உண்மையில், துளசி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலுக்கு நல்லது. இது தவிர, துளசி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே நீங்கள் தினமும் மூன்று துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். இதன் மூலம் நிச்சயம் பலன் பெறுவீர்கள்.


மா இலைகளும் பலன் தரும்
இது தவிர, சர்க்கரை நோயாளிகளுக்கு மா இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் பல சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இந்த இலைகளில் காணப்படுகின்றன, அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலைகளுக்கு இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தும் திறனும் உண்டு.


நாவல் பழம் விதைகள் பயன் தரும்
சிலர் நாவல் பழத்தின் விதைகளை வீசிவிடுகிறார்கள், ஆனால் இந்த கொட்டைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இந்த விதைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பெருமளவு குறைக்க உதவும். அவற்றின் விதைகளை அரைத்து, தேநீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதன் மூலம் பலன் பெறுவீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR