Lesser Known Symptoms of High Blood Pressure: இன்றைய அவசர வாழ்க்கை முறையில், பல வித நோய்கள் மனிதர்களை ஆட்கொள்கின்றன. இவற்றில் பெரும்பாலானவைக்கு தவறான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணமாக அமைகின்றது. இந்த நோய்களில் முக்கியமான ஒன்று உயர் இரத்த அழுத்தம். இதனால் இன்னும் பல அபாயமான நோய்களும் நம்மை ஆட்கொள்ளத் தொடங்குகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முந்தைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியவர்களுக்கே உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. ஆனால், இன்றைய அவசர காலத்தில் இவற்றுக்கு வயது வரம்பே கிடையாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த நோய்கள் சமமாக தாக்குகின்றன. அதுவும் இந்தியாவில் உயர் இரத்த அழுத்தம் மிகவும் பொதுவானதாகி வருகிறது. இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், மாரடைப்பு போன்ற ஆபத்தான இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 


உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கான அறிகுறிகளை உடல் வெளிப்படுத்தினாலும், சில அறிகுறிகள் அரிதாகவே காணப்படுவதாக டாக்டர் இம்ரான் அகமது கூறுகிறார். இவற்றை நாம் அத்தனை தீவிரமாக எடுத்துக்கொள்வதும் இல்லை. ஆனால், மிக அரிதாக காணப்படும் இந்த எச்சரிக்கை அறிகுறிகள் என்ன என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி பெரிய ஆபத்துகளை தவிர்க்க முடியும். 


உயர் இரத்த அழுத்தத்தின் அரிதான அறிகுறிகள்: 


1. மங்கலான பார்வை


உயர் இரத்த அழுத்தம் காரணமாக கண் பார்வை அவ்வப்போது மங்கலாகலாம். ஆகையால் வழக்கமான கண் பரிசோதனைகள் முக்கியம். இது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். மங்கலான பார்வையைத் தடுக்க, சரியான மருந்து, உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றது. இதனால், உயர் இரத்த அழுத்தம் காரணமாக விலைமதிப்பற்ற நம் கண்கள் பாதிக்கப்படாமல் நாம் பாரத்துக்கொள்ளலாம். 


மேலும் படிக்க | வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்


2. அவ்வப்போது சோர்வான உணர்வு


ஒருவர் கடினமான வேலைகளைச் செய்யும்போது சோர்வாக இருப்பது பொதுவான ஒரு விஷயம். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் சோர்வாக உணர்ந்தால், உடனடியாக இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வெண்டும். சோர்வை நீக்க, சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் 7 முதல் 8 மணி நேரம் போதுமான தூக்கம் ஆகியவை அவசியம். அவ்வப்போது மருத்துவரிடம் சென்று பிபி பரிசோதனை செய்து ஆலோசனை பெறுவது நல்லது. 


3. அவ்வப்போது வரும் தலைவலி


அவ்வப்போது தலைவலி ஏற்பட்டாலோ, இதில் சில நேரங்களில் தாங்க முடியாத அளவில் தலைவலி இருந்தாலோ, அதைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதும் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் அவசியமாகும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வலி நிவாரணிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கும் இரத்த அழுத்தத்திற்கும் தொடர்பு இருக்கலாம். ஆகையால் BP பரிசோதனையையும் செய்ய வேண்டும்.


4. காதுகளில் பல்வெறு விதமான ஒலிகளை கேட்பது


ஒரு காதிலோ அல்லது இரு காதுகளிலுமோ தொடர்ச்சியான  அல்லது அவ்வப்போது சத்தம், சலசலப்பு அல்லது ஹிஸ்ஸிங் ஒலிகள் கேட்டால், அதற்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். இதைத் தவிர்க்க, மன அழுத்தத்தைக் குறைக்கவும். அதிக சத்தம் உள்ள இடங்களில் இருப்பதை தவிர்க்கவும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இரவில் இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்... கொலஸ்ட்ரால் அதிகமாகுது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ