உடலில் அயோடின் இல்லாததால் தைராய்டு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தைராய்டு சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாதபோது, ​​​​உடலில் பல பிரச்சனைகள் எழ ஆரம்பிக்கின்றன. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் தைராய்டு நோயால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்க தைராய்டு சங்கத்தின் கூற்றுப்படி, இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரின் அறிகுறிகள் விரைவில் தோன்றத் தொடங்குகின்றன. உடலில் சோர்வு, முடி உதிர்தல், பெண்களுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வராமல் இருப்பது, சோர்வான, அமைதியற்ற மனநிலை போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும். இந்த நோய்க்கான அறிகுறிகளை உடனுக்குடன் பரிசோதித்தால், உடனடியாக சிகிச்சை அளித்து கட்டுப்படுத்தலாம். தைராய்டு சுரப்பி ஏன் பெரிதாகிறது மற்றும் அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றும் இங்கே தெரிந்துகொள்ளலாம். 


தைராய்டு என்றால் என்ன: 


தைராய்டு என்பது கழுத்தின் கீழ் பகுதியின் நடுவில் உள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பி ஆகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. நாம் எதை சாப்பிட்டாலும், இந்த சுரப்பி அதை ஆற்றலாக மாற்றுகிறது. இதனுடன், இதயம், தசைகள், எலும்புகள் மற்றும் கொலஸ்ட்ராலையும் பாதிக்கிறது.


தைராய்டு பெருகுவதற்கான காரணங்கள் என்ன?


தைராய்டு பிரச்சனைக்கு மன அழுத்தம், வைட்டமின் ஏ குறைபாடு, உடலில் அயோடின் குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை, உடலில் உள்ள நச்சுகள் மற்றும் மருந்துகளை உட்கொள்வது போன்ற பல காரணங்கள் உள்ளன. வீட்டிலேயே தைராய்டை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.


உணவில் தேங்காய் எண்ணெயை சேர்த்துக்கொள்ளுங்கள்:


தேங்காய் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையை கட்டுப்படுத்துகிறது. காய்கறிகளை சமைக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். தைராய்டு சுரப்பியால் சிலருக்கு கை, கால்கள் குளிர்ச்சியாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் நிவாரணம் கிடைக்கும்.


ஆப்பிள் வினிகரை உட்கொள்ளுங்கள்: 


தைராய்டு நோயாளிகள் தங்கள் உணவில் ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்ள வேண்டும். இதனால் தைராய்டு கட்டுக்குள் இருக்கும். ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடையை குறைக்கிறது, உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. ஆப்பிள் வினிகரை தண்ணீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் பலன் கிடைக்கும்.


மஞ்சளை உட்கொள்ளவும்: 


மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள், தைராய்டை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பாலுடன் மஞ்சளைப் பயன்படுத்தினால், தைராய்டு கட்டுப்படும்.


அசைவம் சாப்பிடுங்கள்: 


உணவில் இறைச்சி, மீன் மற்றும் முட்டைகளை உட்கொள்வதன் மூலம் தைராய்டு கட்டுப்பாட்டில் இருக்கிறது.  உங்கள் தைராய்டு அதிகரித்துக் கொண்டிருந்தால், உடனடியாக உணவில் கவனம் செலுத்துங்கள். உணவில் செய்யப்படும் சில மாற்றங்களால் தைராய்டை கட்டுக்குள் கொண்டு வரலாம். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உங்கள் எலும்புகளில் வலுவில்லையா? காரணம் இதுதான், இப்படி சரி செய்யுங்கள்  


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ