Health Tips in Tamil: நாம் அன்றாடம் நமது சமையலில் பல வித காய்கறிகளை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு காய்க்கும் குணாதிசயங்கள் வேறுபடுகின்றன. இவை அனைத்தும் நம் உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. ஆனால், இவற்றில் சில காய்களை அளவுக்கு மீறி உட்கொண்டால், அவற்றால் உடலுக்கு பிரச்சனைகளும் ஏற்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமது சமையறைகளில் எந்த காய் உள்ளதோ இல்லையோ, கண்டிப்பாக உருளைக்கிழங்கு இருக்கும். என்ன செய்வதென்றே தெரியாத நேரத்தில் கை கொடுக்கும் ஆபத்பாந்தவனாக இது இருக்கின்றது. மேலும், ஏதாவது காய் குறைவாக இருந்தால், அளவை அதிகரிக்க இதை சேர்த்துக்கொள்ளலாம். அனைத்து காய்களுடனும் இது அற்புதமாய் சேர்ந்துவிடும். உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.


பல வகையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உருளைக்கிழங்கில் உள்ளன. இது ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. உருளைக்கிழங்கு பல சுவையான வழிகளில் சமைக்கப்படுகிறது. இதன் காரணமாக இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு காயாக உள்ளது. ஆனால், இதனால் வாயுத்தொல்லை போன்ற பல பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. 


இவ்வளவு தனித்துவம் நிறைந்த காயை ஒரு மாதம் சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும்? இதை பற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தது உண்டா? ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ் இதை பற்றி விளக்குகிறார்.


Potato: ஒரு மாதம் உருளைக்கிழங்கு சாப்பிடாமல் இருந்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள்


1. முக்கியமான சத்துக்கள்


உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து மற்றும் இன்னும் பல தாதுக்கள் நிறைந்துள்ளன. ஒரு நபர் ஒரு மாதம் உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருந்தால், இந்த சத்துக்களின் (Nutrients) குறைபாடு ஏற்படலாம். இந்த சத்துக்கள் உள்ள மற்ற உணவுகளை நீங்கள் உட்கொண்டால் இந்த குறைபாட்டை சற்று குறைக்கலாம். 


மேலும் படிக்க | ஓவர் எடையை ஒரே மாதத்தில் குறைக்க உதவும் இலவங்கப்பட்டை பால்: இப்படி குடிங்க


2. நோய் எதிர்ப்பு சக்தி


உருளைக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. இது நமது நோயெதிர்ப்பு (Immunity) மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது. ஒரு மாதம் உருளைக்கிழங்கை சாப்பிடாமல் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றுக்கு ஆளாக நேரிடலாம். இருப்பினும், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பிற உணவுகளை உட்கொண்டால் அத்தகைய பிரச்சனைகள் எதுவும் இருக்காது.


3. செரிமானத்தில் விளைவு


உருளைக்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்புக்கு (Digestion) அவசியமானதாக பார்க்கப்படுகின்றது. உருளைக்கிழங்கை ஒரேயடியாக நிறுத்திவிட்டால், செரிமான அமைப்பு மோசமாக பாதிக்கப்படலாம். மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள மற்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். 


4. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்


உருளைக்கிழங்கில் ஏராளமான மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஆகையால், இதை நீரிழிவு நோயாளிகள் குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். பொதுவாக சமைத்த உருளைக்கிழங்கின் காரணமாக குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்கும். ஆகையால், ஒரு மாதத்திற்கு உருளைக்கிழங்கைத் தவிர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயாளிகள் பயனடையலாம். இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு (Blood Sugar Level) கட்டுக்குள் இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சுகர் அதிகமாயிடுச்சா... இந்த பச்சை சட்னியை ட்ரை பண்ணுங்க - கட்டுக்குள் வரும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ