முன்கூட்டிய நரை முடிக்கு தீர்வு: இளம் வயதிலேயே முடி நரைத்துவிடுவது என்பது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால் சிலருக்கு மனசோர்வு உண்டாகி, இதற்காக பல்வேறு வகையான சிகிச்சைகள் செய்கின்றனர். அவற்றை மறைக்க, பல்வேறு ரசாயன சாயங்களை பயன்படுத்தப்படுகின்றன, இது முடி உதிர்தல், (Hair Fall) முடி உடைவது போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே உங்களின் முடியின் கருமையை நீங்கள் பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றால் இன்று நாங்கள் அதற்கான தீர்வை இங்கே கொண்டுவந்துள்ளோம். இதனால் மூலம் நீங்கள் உங்களின் நரை முடியை (tips to stop white hair) ஒரேடியாக போக்கலாம். மேலும் இந்த தீர்வு உங்களின் முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூந்தல் நரைப்பதற்கான காரணம்
இயற்கையாகவே உடலில் மெலனின் அளவு குறையும் போது அது கூந்தலிலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கும். கருமையான கூந்தலுக்கு நிறத்தைக் கொடுப்பது இந்த மெலனின் தான். இந்த மெலனின் உடலில் குறையும் போது நமது கூந்தலின் நிறம் மாறுகிறது. இது நரைமுடி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும்.


மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் பிரச்சனையா? இவைதான் கெட்ட கொலஸ்ட்ராலை அதிரடியாக குறைக்கும் உணவுகள்!!


நரை முடியைப் பார்த்து பீதியடைய வேண்டாம்
முடி நரைப்பதற்கு உண்மையான காரணம் தவறான உணவுமுறை மட்டுமல்ல, பல நோய்களின் விளைவுகளாலும், முடி முன்கூட்டியே நரைக்கத் தொடங்குகிறது. கூந்தலை கருப்பாக வைத்துக்கொள்ள அதிக டென்ஷன் எடுக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இயற்கையாகவே கருப்பாக்கலாம், அது மிகவும் மலிவான விலையில்.


இந்த பொருட்கள்ஐ பயன்படுத்தப்படும்
முதலில், ஒரு கப் கடுகு எண்ணெயை (Mustard Oil) எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீர் (Water), கறிவேப்பிலை (Curry Leaves), ஒரு துண்டு கற்றாழை (Aloe Vera), கலோஞ்சி (Nigella), ஆளி விதை (Flax Seed) மற்றும் கருப்பு சீரகம் (Caraway Seeds) ஆகியவற்றை எடுத்து ஒன்றாக வைத்துக் கொள்ளவும்.


இந்த செய்முறையில் ஸ்பெஷல் மூலிகை எண்ணெயை தயார் செய்யவும்
முதலில், ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதற்குள் கறிவேப்பிலையைப் போட்டு, கற்றாழைத் துண்டைப் போட்டு, ஒரு ஸ்பூன் ஆளி விதையுடன் கருஞ்சீரகம் மற்றும் கலோஞ்சி ஆகியவற்றை தண்ணீரில் போட்டுக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் பாதியாகும்  வரை கொத்திக்க விடவும். அதன் பின்னர் ​​அந்த தண்ணீரில் ஒரு கப் கடுகு எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை கொத்திக்கவிடவும். அதன் பிறகு இந்த கலவை எண்ணெய் போல ஆகிவிடும். பின்னர் இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்களின் கூந்தலில் தடவவும். விரைவில் நரை முடி பிரச்சனை ஒரேடியாக நீங்கும்.


இந்த நிலையில் இந்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் உதிர்ந்த முடி மீண்டும் வளரும், முடி உதிர்தல் குறையும் மற்றும் உச்சந்தலையில் தொற்று அபாயமும் தவிர்க்கப்படும், எனவே இந்த அற்புதமான மூலிகை எண்ணெயை இன்றே தயார் செய்து பயன்படுத்த ஆம்பியுங்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் பருமன் குறைய ‘டயட்’ ஃபாலோ பண்ணறீங்களா.. 8 விஷயங்களை மறக்காதீங்க..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ