சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோடை விடு முறைகால கடைசி அமர்வுக்கான நீதிபதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆர்.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... 


‘‘கோடை விடுமுறைகால கடைசி சிறப்பு அமர்வுக்கான நீதிபதிகளில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றத்தின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் S.பாஸ்கரன், டீக்காராமன், N.சதீஷ்குமார், ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


அதேப்போல் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு எம்.வி.முரளிதரன் மற்றும் டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


வரும் மே-30 மற்றும் மே-31 ஆகிய தேதிகளில் அவசரமாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை இவர்கள் விசாரிப்பர்’’ என குறிப்பிட்டுள்ளார்!