இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்திரா பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியது. 


இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த விமானி சஞ்சய் சௌஹான் என்பவர்உயிரிழந்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 



ஜாம்நகரிலிருந்து IAF ஜாகுவார் விமானம் வழக்கம் போல் பயிற்சியளிப்பில் இருந்ததுள்ளது. அப்போது, திடீர் என கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விமானியின் மறைவுக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.