உ.பி.,யில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்து உள்ளானது. இந்த விபத்தில் சுமார் 74-க்கும்  மேற்பட்ட பயணிகள் காயமடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உ.பி., மாநிலம் ஆருய்யா அருகே காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை 2.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில் காய்பியாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதாகவும், சுமார் 74-க்கும் மேற்ப்பட்ட பயணிகள் இந்த விபத்தில் காயமடைந்திப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இதுவரை விபத்துக்கான காரணம் எதுவும் தெரியவில்லை, தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


 



 


கடந்த சில தினங்களுக்கு முன் முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்த விபத்தில், 23 பேர் பலி மற்றும் பலர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.