கர்நாடகாவில் சாமி தரிசனம் செய்து விட்டு காரில் திரும்பிய போது தும்கூர் அருகே கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் தமிழக பக்தர்கள் 10 பேர் உயிரிழப்பு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் அருகே குனிகல் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இன்று அதிகாலை சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 


இதையடுத்து விபத்துக்குள்ளான காருக்கு பின்னால் வந்த மற்றொரு காரும் விபத்துக்குள்ளானது. இதில், பெங்களூருவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காருக்குள் சிக்கியிருந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கார் விபத்தில் இறந்த 10 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஓசூர் அருகே உள்ள சீக்கணப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அவர்கள், கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தாலா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போது விபத்தில் சிக்கி உள்ளனர். இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.