ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 7 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிருஷ்ணா ஆற்றில் பவித்ரா சங்கமம் என்ற இடம் நோக்கி அவர்கள் படகு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென படகு கவிழ்ந்து படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். இதில் 18 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 7 பேர் மாயமாகி உள்ளனர். 


தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை தேடி வருகிறார்கள்.