தெலுங்கானா மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தி காரணமாக ஒரே வாரத்தில் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் தெலுங்கானா இன்டர்மீடியட் கல்வி வாரியத்தின் சார்பில் இன்டர்மீடியட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து 9.74 லட்சம் பேர் கலந்துகொண்டனர். இந்த தேர்வு முடிவுகளில் சுமார் 3.28 லட்சம் பேர் தேர்வில் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் இந்த தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால், மாணவர்கள் விரக்தியடைந்து கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.