புவனேஸ்வர்: ஒடிசா, ஆந்திரா எல்லைபகுதியான மல்காங்கிரி மாவட்டத்தில் துப்பாக்கிச் சண்டையில் 18  மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


 ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்ட வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒடிசா மற்றும் ஆந்திர மாநில போலீசார் இன்று அதிகாலை வனப்பகுதியை சுற்றிவளைத்தனர். வனப்பகுதிக்குள் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்களுக்கும் போலீசாருக்குமிடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த  துப்பாக்கிச் சண்டையில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.