பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பலி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இன்று காலை சுமார் 3.45 மணியளவில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. சில மணி நேரம் நீடித்த சண்டையில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதையடுத்து, மேலும் ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 



உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் உடல் பேகன்ஜோரில் உள்ள பட்டாலியன் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.