கந்தலாவுக்கு அருகே சரக்குப் போக்குவரத்து இரயில் இரண்டு பெட்டிகள்; இன்று ஒருவருக்கொருவர் மணி நேரத்திற்குள் மூன்றாவது தடம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா: கண்டாலா அருகே இன்று(வியாழக்கிழமை) சரக்குப் போக்குவரத்து இரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.


இன்று அதிகாலை உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஓராவுக்கு அருகே ஹவுரா-ஜபல்பூர்-சக்திபுஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஒரு மாதத்திற்குள், உ.பி மாநிலத்தில் மூன்றாவது விபத்து நடந்திருக்கிறது. 


அதேபோல டெல்லியில் உள்ள மின்டோ பாலம் அருகில் டெல்லி-ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் மற்றும் பவர் கோச் தடம்புரண்டன. இதில் ஒரு பயணி காயம் அடைந்தார்.


இந்த இரு இடங்களிலும் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மகாராஷ்டிரா கண்டாலா அருகே சரக்குப் போக்குவரத்து இரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது. 


இன்று மட்டும் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து தடம் புரண்டுள்ளது. தொடரும் ரயில் விபத்துக்கள் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.