ஜியோவின் சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை நிறுத்திய அம்பானி..!

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ, சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அம்பானி எடுத்த இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 3, 2024, 01:53 PM IST
  • 2 பிளான்களை நிறுத்திய ஜியோ நிறுவனம்
  • கோடிக்கணக்கான யூசர்களுக்கு ஷாக் நியூஸ்
  • அதே அம்சங்களுடன் இருக்கும் மற்ற பிளான்கள்
ஜியோவின் சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை நிறுத்திய அம்பானி..! title=

ஜூலை 3 ஆம் தேதியான இன்று முதல் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் அதிகரிக்கிறது. நீங்கள் ஜியோ பயனராக இருந்து, ஜூலை மூன்றாம் தேதிக்கு முன் உங்கள் மொபைலை ரீசார்ஜ் செய்திருந்தால் சிறப்பு. ஆனால், இனி வரும் நாட்களில் கூடுதல் விலைகளில் தான் உங்கள் பிளான்களை ரீச்சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். அண்மையில் ஜியோ நிறுவனம் ரூ.395 மற்றும் ரூ.1559 திட்டங்களை நிறுத்தியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், அதே அம்சங்களுடன் இருக்கும் மீதமுள்ள ரீச்சார்ஜ் பிளான்களை வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

ஜியோ நிறுவனத்தின் இரண்டு பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களான ரூ.395 மற்றும் ரூ.1559 ஆகியவை ஜியோவின் My Jio ஆப் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்போது இல்லை. அதாவது, கட்டண உயர்வுக்கு முன்பே இந்த திட்டங்களை அந்த நிறுவனம் நீக்கியுள்ளது.

மேலும் படிக்க | BSNL-ன் விலை குறைந்த பிளான்கள்... ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியாவை விட கம்மி!

நீக்கப்பட்ட திட்டங்கள் நன்மைகள் என்ன?

ரூ.395 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசுகையில், நிறுவனம் இந்த திட்டத்தை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கி வந்தது. இந்த திட்டம் வரம்பற்ற 5G டேட்டாவுடன் வழங்கப்பட்டது. ரூ.1559 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் ஒரு வருடத்திற்கு சில நாட்கள் குறைவாக 336 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவும் வழங்கப்பட்டது.

இப்போது இருக்கும் பிளான் என்ன?

நிறுவனம் தற்போது அதன் பயனர்களுக்கு ரூ.2545 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை 336 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்/நாள், வரம்பற்ற குரல் அழைப்பு வசதி ஆகியவற்றை வழங்குகிறது. அதே நேரத்தில், ஜியோ பயனர்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.666 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இன்னும் உள்ளது. இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசுகையில், இந்த திட்டம் 1.5 GB/நாள் டேட்டா, 100 SMS/நாள் மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதியுடன் வருகிறது.

ப்ரீபெய்டு திட்டங்கள் விலை ஏன் அதிகரிக்கப்படுகின்றன?

உண்மையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நிதி இழப்புகளைக் கருத்தில் கொண்டு ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. ஒரு பயனருக்கு சராசரி வருவாயை அதிகரிக்க நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளன.

மேலும் படிக்க | போனில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்ட புகைப்படங்களை மீட்டெடுக்க..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News