தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்த அகவிலைப்படி உயர்வு இந்த வருட ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 


முன்னதாக, மத்திய அரசு 7-வது சம்பள கமிஷன்படி 6 சதவீதம் அகவிலைப் படி உயர்வு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.