டெல்லியில் காஷ்மீரி கேட் அருகே ஒரு நடைபாதையில் நேற்று இரவு மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீது கார் ஏறி விபத்துக்குள்ளானது. 


இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காரை ஓட்டி வந்த 12-வது பள்ளி மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சுமார் காலை 5.45 மணியளவில் நடைப்பெற்றது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.