சித்ரதுர்கா: கர்நாடக சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஹம்பி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெலி டூரிசம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாயிகளுக்கு கானல்நீராக இருக்கும் விமானப்பயணம் சாத்தியமான நிகழ்ச்சி அனைவருக்கும் நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.


சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவில் ஹெலி டூரிசம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹெலி டூரிசம் தொடங்கிய முதல் 2 நாட்கள் விவசாயிகள் மற்றும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகளுக்கு இலவசமாக ஹெலிகாப்டரில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. 


அதன்படி நேற்று அப்பகுதி விவசாயிகள், ஆடு மேய்க்கும் தொழிலாளிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பயணித்தனர்.


மேலும் படிக்க | குவாண்டம் சீட்ஸ் வாயுக் கசிவு: அம்மோனிய வாயுவை சுவாதித்ததால் பாதிக்கப்பட்ட பெண்கள்


அவர்கள், ஹெலிகாப்டரில் இருந்தபடியே, சுற்றுவட்டார பகுதிகளை கண்டு களித்தனர். இரண்டாவது நாளான இன்றும் ஏராளமானோர் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். 


நேற்றும் இன்றும் இந்த 2 நாட்களிலும் காலை 8 மணிக்கு ஹெலிகாப்டர் சேவை தொடங்கியது. பிற்பகல்  2.30 மணி வரை ஹெலிரைடு நடத்தப்படும்.


சுமார் 200 விவசாயிகள் ஹெலிகாப்டரில் இலவசமாக பறந்து சென்றனர். சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அதேபோல் வாணிவிலாஸ் அணைக்கட்டில் இலவச படகு சவாரியும் நடத்தப்பட்டது. 


இதற்கான ஏற்பாடுகளை ஒசநகர் தொகுதி எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகர் செய்திருந்தார். இதைதொடர்ந்து வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டணத்துடன் ஹெலிரைடு நடத்தப்பட உள்ளது.


மேலும் படிக்க | தொந்தியையும் கொழுப்பையும் குறைக்கும் உணவுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQ