இந்தியாவில் 21 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் உத்தரவின் பேரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 21 பேர் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.  


இதனால் இந்திய மாநிலங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும், அதேவேளையில் உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முக்கியமாக டெல்லி, மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக கூறப்படுகிறது.


ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், நட்சத்திர ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள், மதவழிபாட்டுத் தலங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.