மேகாலயா மாநில தலைநகரான ஷில்லாங்கை சேர்தவர் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய் கிளாரா (23). இவர் இன்டிகோ விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த தகவலை சிலர் போலீசாருக்கு கொடுத்துள்ளனர். 


போலீசார் அவர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்றபோது அவருடன் ஒரு ஆணும், பெண்ணும் தங்கியிருந்தது தெரியவந்தது. ஆனால் அவர்களுக்கு பன்ஷா ராய் கிளாரா எப்போது வெளியே போனார் என்பது தெரியவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளனர். 


எனவே இது தற்கொலையா, விபத்தா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.