ஓகி புயலால் கேரளாவில் 40 பேர் பலியான நிலையில் நேற்று கொச்சி வியாபின் கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் மிதந்த 2 மீனவர்களின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஓகி புயலுக்கு கேரளாவில் பலியான மீனவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.


லட்சத்தீவில் மீட்கப்பட்ட 75 மீனவர்களை கடற்படையினர் நேற்று கொச்சிக்கு திரும்பினர். அவர்களில் 63 பேர் தமிழக மீனவர்கள். 12 பேர் கேரளா மீனவர்கள். மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக கடற்படை அறிவித்து உள்ளது.