மேற்கு வங்காளத்தில் லாரி ஒன்று விரைத்து வந்து கார் மீது மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்காளம் மிட்னாபூர் மாநிலத்தின் உள்ள பனமளிபூரில் இன்று மாலை லாரி ஒன்று கார் மீது மோதிக் கொண்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


லாரி அதிவேகத்தில் விரைத்து வந்து பயணிகளுடன்வந்த  காய்கறி ஏற்றப்பட்ட  கார் மீது மோதிக் கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



இச்சம்பவத்தில் இறந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும், காயமடைந்தவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.