ஜம்மு-காஷ்மீரின் வடமேற்குப் பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட IED குண்டுவெடிப்பு தாக்குதலில் சிக்கி 4 போலீசார் உயிரிழந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாராமுல்லாவில் நடந்த IED குண்டுவெடிப்பில் 4 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் ,இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.


காஷ்மீரின்  பாராமுல்லா மாவட்டம் சோபூரில் பகுதியில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. 


இதையடுத்து காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதலின் போது காவல் துறையினரருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. 


இதில் தீவிரவாதிகள் திடிரென IED வெடிகுண்டை வெடிக்க செய்தான். இதில் சிக்கி 4 போலீசார் சம்பவ உயிரிழந்துள்ளனர். ஒருவர் கயமடைந்துள்ளார்.