இந்திய அரசாங்கத்தால் தேசிய குடிமக்கள் பதிவு (NRC) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் மொத்தம் 445 பங்களாதேஷ் பிரஜைகள் இந்தியாவில் இருந்து திரும்பியதாக பங்களாதேஷின் துணை ராணுவப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பங்களாதேஷ் எல்லைக் காவலர் (BGB) இயக்குநர் ஜெனரல் மேஜ் ஜெனரல் Md  ஷபீனுல் இஸ்லாம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு சட்டவிரோதமாக எல்லை தாண்டியதற்காக 2019-ஆம் ஆண்டில் சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களில் 445 பேர் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீடு திரும்பியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.


உள்ளூர் பிரதிநிதிகள் மூலம் அவர்களின் அடையாளங்களை சரிபார்த்த பின்னர், ஊடுருவியவர்கள் அனைவரும் பங்களாதேஷியர்கள் என்பதை BGB அறிந்து கொண்டது என இஸ்லாம் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்., சட்டவிரோதமாக அத்துமீறல் செய்ததற்காக 253 வழக்குகள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆரம்ப விசாரணையில் அவர்களில் குறைந்தது மூன்று பேர் மனித கடத்தல்காரர்கள் என்று கண்டறியப்பட்டது.


இந்த அத்துமீறல் பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் எல்லைப் படைகளுக்கு இடையே எந்தவிதமான பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று BGB இயக்குனர் தெரிவித்துள்ளார்.


கடந்த வாரம், இஸ்லாம் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது NRC-யை உருவாக்குவது முற்றிலும் இந்தியாவின் "உள் விவகாரம்" என்றும், இரு நாடுகளின் எல்லை பாதுகாப்பு படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் நல்லது என்றும் கூறினார்.


BGB தனது ஆணைப்படி சட்டவிரோத எல்லைக் கடப்புகளைத் தடுக்கும் பணியைத் தொடர்ந்து செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


முன்னதாக, இஸ்லாம் தலைமையிலான ஒரு BGB தூதுக்குழு, இந்தியாவுக்கு இருதரப்பு விஜயம் மேற்கொண்டது, அதன் சக நாடுகளான எல்லை பாதுகாப்பு படை (BSF) உடன் டிஜி அளவிலான எல்லை பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 26-29 வரை நடந்தன, இதன் போது எல்லை தாண்டிய கடத்தல் மற்றும் குற்றவாளிகள் மற்றும் பிறரின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.