புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியின் பஜான்புரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 பேர் இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பு மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுக்குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதனையடுத்து உடல்களை மீட்ட டெல்லி போலீசார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் என்று விசாரித்து வருகிறோம் என்று போலீசார் கூறுயுள்ளனர். இறந்து நிலையில் இருந்த 5 பேரில் 3 குழந்தைகளும் அடங்கும். சில காலங்களுக்கு முன்பு தான் இந்த வீட்டில் வாடகைக்காக இந்த குடும்பம் வசிக்க வந்ததாக கூறப்படுகிறது. 


கணவன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் சிறிது காலம் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்த வீட்டில், ஷம்புநாத் 43 வயது, அவரது மனைவி சுனிதாவுக்கு 38 வயது, அவரது மகள் கவிதாவுக்கு 16 வயது, மகன் சச்சினுக்கு 14 வயது மற்றும் இளைய மகன் அடங்குவார். 


வீட்டின் கதவு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது. யாரும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் காவல்துறையினர் அந்த இடத்தை அடைந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சடலத்தை மீட்டுள்ளனர். 


காலை 11.30 மணியளவில் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர். அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் இருப்பதாக அவர்கள் புகார் அளித்தனர். பின்னர் போலீசார் வந்து கதவை உடைத்து, உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த உடல்களை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கிடைத்த தகவல்களின்படி, அழுகிய நிலையில் இருந்த உடல்கள் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது வீட்டிலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.