ஹைதராபாத்: ஜோகூலாம்பா மாவட்டம் காட்வால் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி, 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், ஓட்டுனரின் சோர்வு காரணமாக அவர் தனது கட்டுப்பாட்டினை இழந்து வாகனம் தடம் புரண்டுள்ளது.


தார்ர்-கோன்ப்பாட் கிராமங்களின் புறநகர்ப்பகுதியில் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.


விபத்து நடந்தபோது போருந்தில் 36 பயணிகள் இருந்தனர் எனவும், இதில் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் பலியாகினர் எனவும் தெரிவித்துள்ளனர். 


விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைகிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது!