ரான்சி: ஜார்கண்ட் மாநிலம் ரான்சியில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் அவரது 10 வயது மகன் மர்மமான முறையில் இறந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரான்சியில் உள்ள ஹில் வீவ் சாலைக்கு அருகில் தனியார் பள்ளி நடத்தி வந்தவர் தன்வீர். இவர் கடந்தாண்டு மாரடைப்பு காரணமாக இறந்தார். இதனையடுத்து இவரது மனைவி ஆரத்தி தேவி(50) அப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பொருப்பேற்ற நடத்தி வந்தார்.


இந்நிலையில் இன்று காலை ஆரத்தி தேவி, பாரியட்டு பகுதி டாக்டர் காலனியில் இருக்கும் தன் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலத்திற்கு அருகில் அவரது 10-வயது மகனின் சடலும் மீட்கப்பட்டுள்ளது.


இவர்கள் இருவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது என காவல்துறை அதிகாரி அமன் குமார் தெரிவித்துள்ளார். இவர்களின் மரணமானது தற்கொலை தானா என்ற கோனத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் மீட்கப்பட்ட உடல்களை ரான்சி மாகாண மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.