பீகாரில் தனது தந்தையின் முன்னால் 19 வயது சிறுமி கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாகிய கொடூரர்கள் கைது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகாரில் 19 வயதான இளம்பெண், தந்தையின் கண்முன்னே 6 பேரால் கொடூரமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.


கிஷன்கஞ்ச் மாசட்டத்தில் உள்ள கோதிவாடி (Kodhiwadi) என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் நுழைந்த கும்பல் அங்கிருந்த தந்தை மற்றும் மகளை சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆட்கள் நடமாட்டமற்ற இடத்துக்கு எடுத்துச் சென்றது. தந்தையைத் தாக்கி மரத்தில் கட்டிவைத்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரின் கண்முன்னே அவரது 9 வயது மகளை கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.


இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டிச் சென்ற நிலையில், தந்தை கோதிவாடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதைத் தொடர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் தேடி வருவதாக எஸ்.பி.குமார் ஆசிஸ் தெரிவித்துள்ளார். 


மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை கிஷன்கஞ்ச் சதார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகாக அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து,, குற்றவாளிகள் ஆறு நபர்களையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.